Posted in
ஐக்கிய தேசியக் கட்சி ஓட்டமாவடி பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவோடு சபையைக் கைப்பற்றும் என்று நேற்றே நாம் ஆதாரங்களை முன்வைத்து புலனாய்வுச் செய்தியாக முன் வைத்திருந்தோம். அது இன்று உண்மையாகியுள்ளது.
ஒரு பொறுப்பான சமூக ஊடகம் என்ற வகையில் நடக்கவிருப்பதை முன் கூட்டியே நம்பகமான தகவல்களை வைத்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். அதற்கான அனைத்து உதவிகளையும் பல வழிகளில் எமக்கு வழங்கிய நண்பர்களுக்கு எமது ஊடகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதற்கு முன்னர் ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத் தெரிவு நடப்பதற்கு முன்பாக உத்தேசக் கணீப்பீட்டினை நாம் மிகத் துல்லியமாக வழங்கியிருந்தோம். அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போதும் சரியான கருத்துக் கணிப்பினை முன்கூட்டி வழங்கியிருந்தோம். இப்போது ஓட்டமாவடி பிரதேச சரபயில் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள்? என்னென்ன உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன என்றும் முன்கூட்டி செய்தி வெளியிட்டிருந்தோம்.
சரியான நேரத்தில் சரியான செய்திகளை உடனுக்குடன் வழங்க நாம் என்றும் தயாராக இருக்கின்றோம் என்பதோடு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினையும் வரவேற்பினையும் எதிர்பார்க்கின்றோம்.


