Follow me on Twitter RSS FEED

தேசிய ரீதியில் முதலிடம் பெற்று ஓட்டமாவடி மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாணவி - ஹனான் அமீன்

Posted in
ஓட்டமாவடியைச் சேர்ந்த பௌசுல் அமீன் (பாராளுமன்ற உத்தியோகத்தரின்) மகள் ஹனான் அமீன் எனும் பெயருடைய மாணவி முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மீலாத் விழா கட்டுரைப் போட்டியில் (தமிழ்மொழி) ஆரம்பப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று எமது ஓட்டமாவடி மண்ணுக்கும் எமது சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஓட்டமாவடி மக்கள் சார்பாக ODDAMAVADI NEWS ஆகிய நாம் இம்மாணவிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு இன்னும் பல சாதனைகளைப் புரியப் போதுமான ஆற்றல்களை இறைவன் வழங்க வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றோம்.
 இந்த மாணவி கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரியில் தற்போது தரம்-5இல் கல்விகற்று வருகின்றார். கிழக்கு மாகாணத்தைப் போன்று சிறந்த மேலதிக கற்கை வசதிகள் கிடைக்காத போதிலும் இவ்வாறானதொரு சாதனையை மாணவி ஹனான் அமீன் படைத்துள்ளமை உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

அத்தோடு இந்த மாணவியின் தந்தை பௌசுல் அமீன் அவர்கள் எமது ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதோடு அவரும் இந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பாராளுமன்ற சேவை உத்தியொகத்தராகக் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

பிறந்த மண்ணிலிருந்து தொழில் நிமித்தம் இடம்பெயர்ந்து தலைநகருக்குச் சென்றிருந்தாலும் ஓட்டமாவடிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தனது மகள் சாதனை படைக்குமளவுக்கு அர்ப்பணிப்புடன் இருந்த பௌசுல் அமீன் மற்றும் அவரது துணைவியாரையும் பெருமையுடன் வாழ்த்துகின்றோம்.

தேசிய ரீதியில் வெற்றிபெற்றவர்களுக்கான மாபெரும் பரிசளிப்பு நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் இறுதிக்குள் நடத்தப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. 

மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றமைக்கான மாணவி ஹனான் அமீன் பெற்ற பரிசில்கள் -


©ODDAMAVADI NEWS

0 comments: