Follow me on Twitter RSS FEED

சமூக வலைத்தள பாதுகாப்பும், இணையத்தள துஷ்பிரயோகமும் - இளைஞர் செயலமர்வு

Posted in

இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையுடன் சமூக வலைத்தள பாதுகாப்பும், இணையத்தள துஷ்பிரயோகமும் எனும் தொணிப் பொருளில் இளைஞர்களுக்கான செயலமர்வு  இன்று 2018.12.30 ஞாயிற்றுக்கிழமை மட்/ செம்மணோடை அல்- ஹம்றா வித்தியாலயத்தில் இளைஞர் சேவை கள உத்தியோகத்தர் திரு.எஸ். அருளானந்தம் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. 


பயிற்சி செயலமர்வின் வளவாளர்களாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தகவல் நிலைய உத்தியோகத்தர் ஜனாப்.ஏம் ஹனிபா அவர்களும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் IS A (IT) ஆலோசகர் ஜனாப்.MBT.கான் அவர்களும் பங்கேற்று இருந்தனர்.

கோறளைப்பற்று மத்திபிரதேச செயலாளர் பிரிவுகளில்உள்ள இளைஞர் கழக அங்கத்தவர்கள் செயலமர்வில் கலந்து கொன்டனர் இணையத்தளத்தின் தவறான தொழில் நுட்ப பாவனைஇணையத்தள துஷ்பிரயோகம்கணணி குற்றங்கள் - சைபர் கிரைம் போன்ற தலைப்புக்களில் இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன் பங்குபற்றுனர்களுக்கு சிறந்த சமூக ஊடக வலையமைப்புக்காக அணிதிரழ்வோம் எனும் கையேடும் வழங்கிவைக்கப்பட்டது.













விபத்துக்களைத் தடுக்க கல்குடா செலஞ்சர்ஸ் RDA இணைந்து முன்மாதிரியான நடவடிக்கை

Posted in

நாவலடி – கொழும்பு பிரதான வீதியில் புனானை ஆர்வு 125/3 எனும் இடத்தில் வீதியின் குறுக்காக நீர் வழிந்தோடக் கூடிய இடம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் முற்றாக சேதமடைந்து வீதியிலும் பாரிய குழி ஏற்பட்டிருந்தது. இதன் திருத்த வேலைகள் துரித கதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த இடத்தில் வீதி திருத்த வேலைகள் இடம்பெறுகின்றன என்ற அறிவித்தல் எச்சரிக்கை சமிக்ஞைகள் முறையாக இடப்பட்டிருந்தாலும் வேகமாக வாகனத்தை செலுத்தி வரும் சாரதிகளினால் ஒரு குறுகிய காலத்திற்குள் 05ற்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டிருந்ததோடு ஒரு விபத்தினால் பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்த 23 வயதுடைய கர்ப்பிணித் தாயும் மரணமடைந்திருந்தார்.

மேலும் இவ்விடத்தில் விபத்துக்கள் இடம்பெறா வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்குடா செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் முன்வந்து RDAயின் ஆலோசனைகளைப் பெற்றிருந்தனர். 

அந்தவகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்குப் பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் திரு. சசினந்தன், தொழிநுட்ப உத்தியோகத்தர் திரு. தயாபரன் ஆகியோரின் வழிகாட்டலில் குறித்த இடத்தினூடாக வாகனங்கள் மெதுவாகப் பயணிக்க அறிவுறுத்தும் சமிக்ஞைகள் அறிவுறுத்தல்களுடன் போக்குவரத்து பொலிசாரின் உருவ அமைப்பை ஒத்த பொம்மை ஒன்றையும் நிறுவ கல்குடா செலஞ்சர்ஸ் அணியினர் உபதலைவர். முஸ்தபா ஹாஜியின் தலைமையில் அவ்விடத்திற்கு நேற்றைய தினம் 26.12.2018ம் திகதி சென்றிருந்தனர். இதன் போது RDA மேற்பார்வை உத்தியோகத்தர் எம்.ஐ.எம். றிபான் குறித்த இடத்திற்கு வந்து வேலைகளை கண்காணித்திருந்தார். 

கல்குடா செலஞ்சர்ஸ் அணியின் இந்த செயற்பாடானது ஏனைய கழகங்கள் அமைப்புக்களுக்கு ஒரு முன் உதாரணமானதாகும் என்பதோடு மிகவும் பாராட்டத்தக்க ஒன்றும் ஆகும். அத்தோடு இவ்விடத்தில் முழு ஒத்துழைப்பு வழங்கிய RDAயையும் பாராட்டி ஆக வேண்டும்.






இறையடி சேர்ந்த இரு ஆசான்களின் ஞாபகார்த்தமாக இரத்ததான முகாம் - OCC 2012 Batch

Posted in


மர்ஹூம் AHM.தாஹிர் (ஆசிரியர்)மர்ஹூம் ALM.கபீர் (ஆசிரியர்) அவர்களின் நினைவாக மட்/மம/ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 2012 .பொ. சாதாரண தர பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்த தான முகாமொன்று எதிர்வரும் ஓட்டமாவடி தேசிய பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெறவுள்ளது 29.12.2018 (சனிக் கிழமை) மு..8.30 தொடக்கம் பி..4.30 வரை மட்/மம/. எனவே அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.


கல்குடா - பிரதேச கலாசார விழா...

Posted in
எஸ்.எம்.எம்.முர்ஷித் - 

கலாசார அலுவல்கள் திணைக்களம் கிழக்கு மாகாண பண்பாட்டல்வல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் நடாத்திய பிரதேச கலாசார விழாவும் வாழை மடல் மலர் வெளியீடும் நேற்று (17.12.2018) திங்கள் கிழமை வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு பாராட்டுப்பெரும் இளம் கலைஞர்கள், விஷேட கௌரவ விருது என்பன வழங்கப்பட்டதுடன் கலாசார விழாவை முன்னிட்டு பாடசாலை மட்டத்திலும் திறந்த மட்டத்திலும் நடாத்திய போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மூத்த கலைஞர்களாக பல்துரை சார்ந்த விருது யூ அஹமட்டுக்கு வழங்கியதுடன் இலக்கியத்திற்கான விருது ஏ.அப்துல் மஜீதுக்கு வழங்கியதுடன் கிராமிய வைத்தியத்திற்கான விருது எல்.அப்துல் காதருக்கும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இளம் கலைஞர்களுக்கான விருது ஜிப்ரிஹாஸனுக்கு சிறுகதைக்கான விருதும், யூ.எல்.ஸல்மானுல் ஹரீசுக்கு கவிதைக்கான விருதும், பீ.ரீ.பாத்திமா அஸ்பாவுக்கு ஓவியத்திற்கான விருதும் எம்.எம்.அஸ்லத்திற்கு அறிவிப்பாளருக்கான விருதும், ஐ.எல்.அப்துல் நாசருக்கு மரக் கைவினைக்கான விருதும் வழங்கப்பட்டதுடன் விஷேட கௌரவ விருது வாழைச்சேனை நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபு கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் எம்.ஏ.றஹ்மதுல்லாஹ்வுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன் இளம் ஓவியர்கலாளான எம்.சமீம் மற்றும் உசனார் நிமாஸ்; ஆகியோரால் பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்முஸம்மிலின் உருவம் ஐந்து நிமிடத்தில் வரைந்து சபையோரின் பாராட்டினையும் பெற்றனர்.

பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ரஞ்சித் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல்.அப்துல் கபூர், கே.எல்.அஸ்மி, எம்.பி.எம்.தையூப், எம்.ஐ.எம்.இம்தியாஸ், கோறளைப்பற்று மேற்கு கோட்ட கல்வி பணிப்பாளர் .எஸ்.கே.றஹ்மான், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான், சாட்டோ இணைய தளத்தின் பணிப்பாளர் வை.எல்.மன்சுர் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.



















“கல்குடாவில் போதையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்” - ஏ.எல்.எம். சதாம்

Posted in
கல்குடா ACMC இளைஞர் அணியின் அன்பளிப்புடன் இளம்பிறை விளையாட்டுக் கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வு இன்று 08.12.2018ம் திகதி 04.30 மணியளவில் மீராவோடையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் அமைப்பாளர் ஏ.எல்.எம். சதாம் அவர்கள் கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் போதைவஸ்து பாவனை இளைஞர்களிடத்தில் அதிகரித்து வருவதனையும், இளைஞர்கள் போதைவஸ்தின் பக்கம் எவ்வாறு ஈர்க்கப்படுகின்றார்கள் என்றும் அதனை தடுத்து நிறுத்த இதுவரை முறையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இன்றைய இளைஞர்களின் நிலை குறித்து கவலை தெரிவித்தார்.

அத்தோடு சமூகத்திலுள்ள சகல மட்டத்தினரும் பாகுபாடின்றி ஒன்றுபட்டு ஒரு கட்டமைப்பின் கீழ் போதைவஸ்து பரவலுக்கெதிராக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் இல்லாதுபோனால் எமது ஊர் இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தானதொன்றாக மாறி முஸ்லிம் சமூகத்திற்கே பெரியதொரு சவாலாக அமைந்துவிடும் என்றும் மேலும் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்தியர் அல்தாப் அலி அவர்களும், முன்னாள் மீன்பிடி நீரியல்வள, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எஸ்.எம். றிஸ்மின் (ஆசிரியர்) அவர்களும், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட் அவர்களும், செம்மண்ணோடை பிரதேச சபை வேட்பாளர் ஹக்கீம் ஆசிரியர் அவர்களும் இன்னும் சில அதிதிகளும் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  


பட உதவி  நுசைக் அஹமட்

லீடர் அஷ்ரப் கிண்ணம் - கல்குடா உதைபந்தாட்டக் கழகம் இறுதிப் போட்டியில்

Posted in
ஈஸ்ட் டைம்ஸ் அனுசரணையில் அக்கறைப்பற்றில் நடைபெற்று வரும் ”லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த” வெற்றிக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் கல்குடா உதைபந்தாட்டக் கழகமானது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று மாபெரும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இறுதிப் போட்டி எதிர்வரும் 19.10.2018ம் திகதி அக்கறைப்பற்று பதுர்நகர் மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது. மேற்படி இறுதிப் போட்டிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரான ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

கல்குடா உதைபந்தாட்டக் கழகமானது ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஆண்டிலேயே மாபெரும் உதைபந்தாட்டத் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளமை கழக வீரர்களின் திறமையினையும் ஒற்றுமையினையும் எடுத்துக் காட்டுவதாய் அமைந்துள்ளது. லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரிப்பதன் மூலம் எமது மண்ணின் பெருமையினை பறைசாற்ற வேண்டுமென்று அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு புல்மோட்டை காணி பிரச்சினை தொடர்பாக அனைத்து பள்ளிவாயல்கள் ஒன்றியத்தினால் அவசர மகஜர் அனுப்பி வைப்பு

Posted in

புல்மோட்டை முஸ்லிம்களின் காணிகளில் இடம்பெற்றுவரும் பௌத்த மதகுருவின் அத்துமீறல் மற்றும் பிரதேச மக்களின் நீண்ட கால காணி பிரச்சினை தொடர்பாக தீர்வுகளை பெற்றுத்தரும்படியான மகஜர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இம்மகஜர் புல்மோட்டை அனைத்து பள்ளிவாயல்கள் ஒன்றியத்தினால் பதிவுத் தபால் மற்றும் தொலை நகல் ஊடாகவும் 14.09.2018ஆம் திகதி - வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறிப்பிட்ட பௌத்த மதகுருவால் புல்மோட்டையின் அணைத்து பகுதிகளிலும் காணப்படும் காணிகளை அத்துமீறி பிடிப்பது தொடர்பாகவும், இப்பிரதேசத்தில் வசித்து வரும் மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்களை பெற்றுத் தரக்கோரியும், அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள தங்களது காணிகளுக்குள் சென்று தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள வன பரிபாலன சபையினர் அனுமதிக்காது குறித்தும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 17.09.2018ஆம் திகதி அரிசிமலையில் காணப்படும் காணிகள் அளவீடு தொடர்பாக நில அளவையாளர்கள் அன்றைய தினம் விஜயம் மேற்கொள்வது தொடர்பாகவும் அவற்றை தடுத்துநிறுத்தி தமது காணிகளை பெற்றுத்தருபடி கோரியும் இன்றைய (14) ஜூம்ஆவின் பின்னர் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருந்த நிலையில் அணைத்து பள்ளிவாயல்கள் ஒன்றியத்தின் தலைமையில் புல்மோட்டை இலாஹியா ஜும்மா பள்ளிவாசலில் கட்சி பேதமின்றி நடைபெற்ற கூட்டத்தில் இதனை இப்போது செய்யாது நிறுத்தம் செய்வதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


 அத்துடன், 13.09.2018ஆம் திகதி - வியாழக்கிழமை (நேற்று) புல்மோட்டை பொலிஸ் உயர் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரது தலைமையில் பிரதேச பள்ளிவாயல்களின் தலைவர்கள், அணைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் இறுதியில் அரிசிமலை விகாரையை அண்டிய தொல்பொருள் பகுதியான 4.5 ஏக்கர் பகுதி மாத்திரம் அளவிடப்படும் என்பதுடன் ஏனைய குடியிருப்புகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் தாம் பொறுப்பு நிப்பதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்பின்னர் நில அளவையின் போது குச்சவெளி பிரதேச செயலாளர், புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் புல்மோட்டை பிரதேச மக்கள் சார்பாக இரண்டு முக்கியஸ்தர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடைபெறவிருந்த எதிப்பு நடவடிக்கையை கை விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.


-MTM. Haither Ali-