Follow me on Twitter RSS FEED

லீடர் அஷ்ரப் கிண்ணம் - கல்குடா உதைபந்தாட்டக் கழகம் இறுதிப் போட்டியில்

Posted in
ஈஸ்ட் டைம்ஸ் அனுசரணையில் அக்கறைப்பற்றில் நடைபெற்று வரும் ”லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த” வெற்றிக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் கல்குடா உதைபந்தாட்டக் கழகமானது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று மாபெரும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இறுதிப் போட்டி எதிர்வரும் 19.10.2018ம் திகதி அக்கறைப்பற்று பதுர்நகர் மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது. மேற்படி இறுதிப் போட்டிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரான ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

கல்குடா உதைபந்தாட்டக் கழகமானது ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஆண்டிலேயே மாபெரும் உதைபந்தாட்டத் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளமை கழக வீரர்களின் திறமையினையும் ஒற்றுமையினையும் எடுத்துக் காட்டுவதாய் அமைந்துள்ளது. லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரிப்பதன் மூலம் எமது மண்ணின் பெருமையினை பறைசாற்ற வேண்டுமென்று அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.