Follow me on Twitter RSS FEED

கல்குடா செலஞ்சர்ஸ் அணியினால் மாற்றுத் திறனாளிக்கு உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டது

Posted in
காவத்தமுனையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு கல்குடா செலஞச்ர்ஸ் அணியினரால் இன்று ஒரு தொகை உதவிப் பணம் நேரில் சென்று வழங்கி வைக்கப்பட்டது. 

குறித்த மாற்றுத் திறனாளி சிறுவனுக்குரிய சிகிச்சைகளுக்கான உதவித் தொகை அண்மையில் இணையச் செய்திகளினூடாகக் கோரப்பட்டிருந்த நிலையில் இன்று இவ்வுதவி கல்குடா செலஞ்சர்ஸ் அணியினரால் வழங்கப்பட்டுள்ளமையானது ஏனைய விளையாட்டுக் கழகங்களுக்கும் ஒரு முன்னுதாரணமான செயற்பாடாகும். 

கல்குடா செலஞ்சர்ஸ் அணியின் கட்டார் கிளையினரால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகைப் பணத்துடன் சேர்த்து இங்குள்ளவர்களின் ஒத்துழைப்புடனும் இந்த உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டது. இந்த அன்பளிப்புப் பணத்தை கழகத்தின் தலைவர் முஸம்மில் அவர்களின் தலைமையில் சென்ற கழக முக்கியஸ்தர்களினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.