Follow me on Twitter RSS FEED

70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அல்-இஸ்லாஹ் இளைஞர் கழகத்தினால் நடாத்தப்பட்ட திறந்த சைக்கிளோட்டப் போட்டி

Posted in

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 70ஆவது சுதந்திர தினத்ததை கொண்டாடும் முகமாக எமது அல் இஸ்லாஹ் இளைஞர் கழகமானது வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் திறந்த சைக்கிளோட்ட போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடாத்தி முடித்தது. இதற்காக வேண்டி மட்டகளப்பின் பல பாகங்களிலும் இருந்து போட்டியாளர்கள் வருகை தந்தது வரவேற்க தக்கதாகவும் சமுக நல்லினக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்து.
மேலும் இந் நிகழ்வானது அல் இஸ்லாஹ் இளைஞர் கழக தலைவர் MM .சம்ஹான் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது .இதில் பிரமத அதிதிகளாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன அவர்களும் ஓய்வு பெற்ற அதிபர் MCH.முஹம்மட் அவர்களும் கலந்து கொண்டனர் மேலும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன அவர்கள் உரையாற்றுகையில் 'சுதந்திர தினம் என்பது நாட்டின் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக கொண்டாட வேண்டிய தினம் ஆகும் இவ்வாறான நிகழ்வுகள் அவற்றிக்கு வழிவகுக்கும்' எனவும் கூறினார். இந் நிகழ்வில் பங்குபற்றிய வெற்றி வீரர்களுக்கு பதக்கங்களும் காசோலைகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது மேலும் இந்நிகழ்வுகளுக்கு நடுவராக கல்குடா நடுவர்கள் சம்மேளனம் கலந்து கொண்டதும் குறிப்பிட தக்கது.




0 comments: