Follow me on Twitter RSS FEED

அலுகோசு பதவி வெற்றிடத்தை நிரப்ப இன்று முதல் நேர்முகப் பரீட்சை

Posted in
மரண தண்டனையை நிறைவேற்றுபவர் (அலுகோசு) பதவி வெற்றிடத்தை நிரப்பவென இன்று (28) நேர்முகப் பரீட்சை ஆரம்பமாகிறது. 

இந்த பதவி வெற்றிடத்திற்கென விண்ணப்பித்த 178 பேரில் 169 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி.டபிள்யு.கொடிப்பிலி தெரிவித்தார். 

3 வருடங்கள் வெற்றிடமாகக் காணப்படும் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை இன்று தொடக்கம் நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. 

1976 ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதோடு, இதுவரை 357 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 comments: