Follow me on Twitter RSS FEED

நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும்: இல்லை அதெல்லாம் பொய்

Posted in

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தரமான பெற்றோல் காணப்படுவதாகவும் அதனால் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் எனவும் கனியவள அமைச்சு தெரிவித்துள்ளது. 

அது மாத்திரமன்றி 35000 மெட்ரிக் தொன் பெற்றோல் எற்றிய கப்பலொன்று இன்று (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எந்த விதத்திலும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படாதெனவும் ஏனைய எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாதெனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் என சிலர் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக கனியவள அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

0 comments: