Follow me on Twitter RSS FEED

தப்பியோடிய புலி சந்தேகநபருக்கு வலைவீச்சு

Posted in
வெசாக் காலத்தில் தப்பியோடிய தமிழீழ விடுதலைப்புலி சந்தேகநபரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் தேடிவருகின்றனர். குறித்த சந்தேகநபர் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கிலிருந்து கடந்த 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தப்பியோடியுள்ளார். சந்தேக நபரான பாலசுப்ரமணியம் ஜடேஷன் என்பவரே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக அறிவித்துள்ள புலனாய்வு பிரிவினர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக சிறைத்தண்டனையும் அனுபவித்து வந்துள்ளார் என்றும் அறிவித்துள்ளனர். வெசாக் வலயத்தில் மாத்தறை சிறையினால் நிர்மாணிக்கப்பட்ட வெசாக் கூடுகளை சோடிப்பதற்காக அழைத்து வரப்பட்ட குறித்த சந்தேநபரே சிறைக்காவலர்களிடமிருந்து தப்பித்துள்ளார். குறித்த சந்தேகநபருடன் மற்றுமொரு சிறைக்கைதியும் தப்பியுள்ளதாக சிறைச்சாலைகள் சீர்த்திருத்த மற்றும் புனர்வாழ்வு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழீழ விடுதலைப்புலி சந்தேகநபர் வவுனியா- நெடுங்கேணியை சேர்ந்தவர் என்றும் மற்றவர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து மாத்தறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் பற்றிய தகவல்களை 011-2451634,011-2451636 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.

0 comments: