Follow me on Twitter RSS FEED

கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளருக்கு பணித்தடை

Posted in
வாகரையில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவருக்கு காயமேற்படுத்தியதன் பின்னர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படும் கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வு உத்தியோகத்தருக்கு  பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்
suspension-of-workவாகரையில் துவிச்சக்கரவண்டியில் சென்ற இருவரை விபத்திற்குள்ளாக்கியமை, அரச வாகனத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை, வகைகூறத்தக்க உத்தியோகத்தரின் பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக விசாரணை நடாத்துவதற்கு மூவரடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.(lankadeepa)

0 comments: