Follow me on Twitter RSS FEED

மட்டக்களப்பில் சிக்கிய பாரிய தொகைப் பாம்புகள் அனர்த்தமொன்று ஏற்படுவதற்கான முன்னறிவித்தலா?

Posted in
மட்டக்களப்பு நாவலடி கடற்பிரதேசத்தில் மீனவர்களின் கரைவலைகளில் ஓரிரு தினங்களாக பெருமளவிலான பாம்புகள் சிக்கியுள்ளன. இதனால் மீனவர்களும் பொதுமக்களும் அதிகம் அச்சமடைந்துள்ளதோடு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை ஆராய்ந்து அனர்த்தங்கள் தொடர்பிலான அறிவித்தல்களை முன்கூட்டி அறிவிப்பதன் மூலம் தங்களை அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.



2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இடம்பெற்ற சுனாமி அனர்த்தம், மற்றும் 2011ம் ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு ஆகியவை நிகழ்வதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு பாரியளவில் பாம்புகள் கரைவலைகளில் சிக்கிய சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி அனுபவங்களினாலும் தற்போது அதிக சீரற்ற காலநிலை நிலவி வருவதன் காரணமாகவும் அத்தோடு இந்திய அனர்த்த முகாமைத்துவ நிலையம் விரைவில் பூகம்பம் ஏற்படலாம் என்று முன்னறிவிப்புச் செய்துள்ளமையாலும் மக்கள் இவ்வாறு பாம்புகள் அதிகளவில் சிக்கியுள்ளமையானது ஒரு அனர்த்தத்திற்கான முன்னறிவிப்பாக இருக்கலாம் என்று பெரிதும் அச்சப்படுகின்றனர்.




© ODDAMAVADI NEWS

0 comments: