Follow me on Twitter RSS FEED

ரெயில்வே அத்தியவசிய சேவையாக அறிவிப்பு - இராணுவத்தினருக்கு ரெயில்வே துறையில் பயிற்சி

Posted in

தற்போது இடம்பெற்றுவரும் ரெயில்வே ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ரெயில்வே சேவை நாட்டின் அத்தியவசிய சேவையாக இன்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியாலளர் மாநாட்டில் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அந்தவகையில் வேலைக்கு உடனடியாகத் திரும்பாத ரெயில்வே சேவை ஊழியர்கள் பணியிலிருந்து தாமாக விலகிக் கொண்டதாகக் கருதப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். அத்தோடு ரெயில்வே பணிப் பகிஷ்கரிப்பினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் மறு அறிவித்தல் வரை தனியார் பேரூந்துகளை அதிவேக நெடுந்சாலைகளில் கட்டணமின்றி பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் ரெயில்வே சேவையில் பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெற்றால் அதனை சுமூகமாக்குவதற்காக இராணுவத்தினருக்கு ரெயில்வே சேவையின் அனைத்துத் துறைகளிலும் பயிற்சிகளை வழங்க தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

© ODDAMAVADI NEWS

0 comments: