Follow me on Twitter RSS FEED

ஸ்ரீ.மு. காங்கிரஸின் இணைப்பாளராக எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத் நியமனம்

Posted in
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதிக்கான இணைப்பாளராக CASTRO அமைப்பின் பணிப்பாளரும் சமூக சேவையாளருமான எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத் அவர்கள் இன்று கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ். ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்புரையின் கீழும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரான எச்.எம்.எம். றியாழ் அவர்களின் சிபார்சின் பேரிலும் இந்நியமனம் தேசிய அமைப்பாளர் கௌரவ. சபீக் ரஜாப்டீன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களினால் இன்று 10.05.2019ம் திகதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரான எச்.எம்.எம். றியாழ் அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் முன்னெற்றமடைவதற்கு எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத் அவர்களின் இவ்விணைப்பாளர் நியமனம் பெரிதும் வலுச் சேர்க்கும் என்பதோடு இளம் தலைமைத்துவங்களான இவ்விருவரும் கட்சியின் வளர்ச்சியில் ஒன்றிணைந்து செயலாற்றி இளைஞர்கள், மூத்த போராளிகள் என அனைவரையும் ஒன்றிணைத்து கல்குடாத் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

0 comments: