Follow me on Twitter RSS FEED

ஓட்டமாவடி UTOCS அமைப்பினால் சேகரிக்கப்பட்ட நிதி ACJU கல்குடாக் கிளையினரிடம் இன்று கையளிக்கப்பட்டது.

Posted in
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் வேண்டுகோளுக்கமைவாக உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் பாதிப்படைந்தவர்களுக்காகவும் அதனைத் தொடர்ந்து வடமத்திய மாகாணத்தில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்களில் பாதிப்படைந்தவர்களுக்குமான நிதி ACJU பிராந்தியக் கிளைகளின் மேற்பார்வையில் பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் ஊடாக இலங்கையிலுள்ள அனைத்துப் பாகங்களிலுமுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் ஜம்மிய்யதுல் உலமா கல்குடாக் கிளையின் மேற்பார்வையின் கீழ் ஓட்டமாவடி ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தினர் (United Tractor Owners' Co-operative Society) காவத்தமுனை, காகிதநகர் ஆகிய பிரதேசங்களில் கடந்த 26.05.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிதி சேகரிப்பில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு பெருந்தொகைப் பணத்தினை வசூல் செய்திருந்தனர். 

மேற்படி சேகரிக்கப்பட்ட நிதியானது இன்று 27.05.2019ம் திகதி இரவு 09.00 மணியளவில் ஓட்டமாவடி ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.பி.எம். ஹுஸைன் தலைமையில் சென்ற குழுவினரால் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.ரி. அமீஸ்டீன் மற்றும் வாழைச்சேனை தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர். இல்ஹாம் இஸ்மாயில் (MBBS) ஆகியோரின் முன்னிலையில் வைத்து அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா – கல்குடாக் கிளைப் பிரதிநிதிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டிருந்தது.

ஓட்டமாவடி ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தினர் தங்களது அமைப்பு சார்ந்த விடயம் மட்டுமல்லாது பொதுநலன் சார்ந்த விடயங்களில் மிகவும் அக்கறையுடனும் ஆர்வத்துடன் செயற்பட்டு வருவதை கௌரவ தவிசாளர் மற்றும் ஜம்மிய்யதுல் உலமா கல்குடாக் கிளையின் பிரதிநிதிகளும் வெகுவாகப் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 


0 comments: