Follow me on Twitter RSS FEED

சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிமினால் மீராவோடை வைத்தியசாலைக்கு 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Posted in
M.T.M. HAITHAR ALI
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிமினால் பத்து மில்லியன் ரூபா (ஒரு கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் தொடர் முயற்சியின் பயனால் இந்நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிம் இத்தருணத்தில் நன்றியுடன் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினராலும், இவ்வைத்தியசாலையினால் பயனடையும் பொதுமக்களாலும் பாராட்டப்பட வேண்டியவராகும்.



சென்ற வருடம் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் வேண்டுகோளுக்கமைவாக இவ்வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிம் இவ்வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளை கேட்டறிந்து கொண்டார். அச்சந்திப்பின்போது வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் இவ்வைத்தியசாலைக்கு சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றினை பெற்றுத்தருமாறு கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தனர். அதன்பயனாக ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுப்பதற்காக சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிமினால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்கான கடிதத்தினை சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சில் வைத்து வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரிடம் பிரதி அமைச்சர் பைசல் காசிம் 2018.08.15ஆம்திகதி - புதன்கிழமை (நேற்று) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

மீராவோடை வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட கடிதப் பிரதியினை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் அமைச்சிலிருந்து உடனடியாக பெற்றுக் கொள்வதற்காக இவ்வைத்தியசாலையில் அக்கறைகொண்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.. அன்வர் - ஆசிரியர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், East Gate வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான எம்.எம்.எம். ஹலால்தீன் இருவரும் முற்றுமுழுதாக உதவிக்கரம் நீட்டியதுடன், இத்தருணத்தில் நன்றியுடன் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் பாராட்டப்பட வேண்டியவர்களாகும். அத்துடன், இவ்வைத்தியசாலையில் சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக்கட்டிடம் ஒன்று அமையப்பெறவேண்டுமென்று ஆரம்பத்திலிருந்து இவ்வைத்தியசாலையில் அக்கறைகொண்டு பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு இன்று ஆரம்ப கட்ட நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற காரணமாக இருந்த காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மற்றும் சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சரின் ஊடகச் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான எம்.. அஹமட் கபீர் இருவரும் இத்தருணத்தில் நன்றியுடன் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் பாராட்டப்பட வேண்டியவர்களாகும்.


அத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கல்குடாத் தொகுதி அமைப்பாளருமான கணக்கறிஞர் எச்.எம்.எம். றியாழும் இத்தருனத்தில் நினைவுகூறப்பட வேண்டியதுடன், கல்குடாப் பிரதேசத்திற்கு பல்வேபட்ட அபிவிருத்தி பணிகளையும் கொண்டுவந்தவராவார். அத்துடன், சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிமிடம் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் மேலும் இரு வைத்தியர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகளும், மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் (MLT) மற்றும் புதியதொரு அம்பியுலன்ஸ் வண்டி ஒன்றினையும் பெற்றுக்கொள்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதுடன், மிகவிரைவில் அவற்றையும் நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார். இவ்வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம்தொட்டு இன்றுவரை இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இவ்வைத்தியசாலையில் கட்டிடம் அமையப்பெற நிதி ஒதுக்கீடு செய்தவர்களாகும். தற்போது அமைந்துள்ள நோயாளர் விடுதி இராஜாங்க அமைச்சர் கௌரவ. எம்.எல்..எம். ஹிஸ்புல்லாவினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டதாகும்.

இதன் பிற்பாடு இன்று சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக்கட்டிடம் ஒன்று அமையப்பெறுவதற்கு முதற்கட்ட ஆரம்ப வேலைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ள சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிம். அத்துடன் கலைக்கப்பட்ட மாகாண ஆட்சியின்போது மாகாண சுகாதார அமைச்சினால் நிருவாக கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கான வேலைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2017ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க அபிவிருத்திகளை இவ்வைத்தியசாலை பெற்றிருந்தபோதும் இதற்கு முன்னரான மாகாண சபை ஆட்சிக் காலத்தின்போது இவ்வைத்தியசாலை சகல வழிகளிலும் முற்றுமுழுதாக புறக்கணிப்பு செய்யப்பட்டு எந்த வகையிலும் முன்னேற்றமடையாத நிலையில் இருந்துவந்துள்ளது.









0 comments: