Follow me on Twitter RSS FEED

KPL உதைபந்தாட்டத் தொடரில் ஓட்டமாவடி யங் லயன்ஸ் சம்பியனானது

Posted in
- MS -
வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் கல்குடாத் தொகுதி உதைபந்தாட்ட அணிகளுக்கிடையில் முதன்முறையாக நடாத்தப்பட்ட KPL உதைபந்தாட்டத் தொடரில் இன்று ஓட்டமாவடி யங் லயன்ஸ் சம்பியனானது.


KPL உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டி இன்று 28.08.2018ம் திகதி மாலை வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. மேற்படி இறுதிப் போட்டியில் யங் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினருடன் இந்த உதைபந்தாட்டத் தொடரை நடாத்திய நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகமும் மோதியது. ஆரம்ப முதல் விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் இறுதியில் யங் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் 3-1 என்ற கோல் கணக்கில் சம்பியனானது. 

இறுதிப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் உரையாற்றிய நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத் தலைவர் ஜஃபர் அவர்கள் ”போதைவஸ்த்தை பிரதேசத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற இனப் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாகச் செயலாற்ற வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்தார். 
இந்த இறுதிப் போட்டி நிகழ்வில் மீன்பிடி நீரியல் வள மற்றும் கிராமியக் கைத்தொழில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரு் அலி அவர்களும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி. அஸ்மி அவர்களும், வாழைச்சேனை பிரதேச செயலாளர் அவர்களும், பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

0 comments: