Follow me on Twitter RSS FEED

TOP WORLD விளையாட்டுக் கழகத்தின் நிருவாகத் தெரிவும் மூத்த வீரர்கள் கௌரவிப்பும்

Posted in
-MS-
TOP WORLD விளையாட்டுக் கழகமானது கல்குடாத் தொகுதியிலுள்ள வெவ்வேறு கழகங்களிலுள்ள திறமையான வீரர்களை ஒருங்கிணைத்து ஒரு வெற்றிகரமான கிரிக்கட் அணியாக வலம் வருகின்றது. 

இந்த அணிக்கான புதிய நிருவாகத் தெரிவும் கல்குடாத் தொகுதியிலுள்ள மூத்த விளையாட்டு வீரர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நேற்று 31.08.2018ம் திகதி மாலை ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டரங்கில் இடம்பெற்றது.  

இதன்போது கல்குடாத் தொகுதியில் கடினப்பந்து கிரிக்கட் போட்டியில் முதன்முதலாக 100 ஓட்டங்களைத் தாண்டி சதம் பெற்ற ஏ.எல். நளீர் (ஆசிரியர்) அவர்களுக்கும், TOP WORLD அணி சார்பாக முதலாவது 50 ஓட்டங்களைப் பெற்ற முஹம்மட் அவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

புதிதாக நிருவாகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டோர்.







புதிய நிருவாகத் தெரிவின் பின்னர் உரையாற்றிய தலைவர் ரனீஸ் அவர்கள் எதிர்காலத்திலும் இவ்வாறான கௌரவிப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் என்பதனையும் தெரிவித்தார். 




0 comments: