Follow me on Twitter RSS FEED

அமெரிக்க திரைப்பட வீடியோ: பொய்க் காரணத்தை கூறும் Google

Posted in

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள அமெரிக்க திரைப்படத்தின் வீடியோவை Google ன் நிறுவனமான Youtube நீக்க மறுத்து வருகின்றது. ஒபாமா கெஞ்சியும் நீக்க முடியாது என Google நேரடியாக சொல்லி விட்டது.
நீக்க முடியாது என்பதற்கு கூகுள் சொன்ன காரணம் ”அந்த வீடியோ Youtube community guideline க்கு உட்பட்டே உள்ளது” எனவே அதை நீக்க முடியாது.
உடனே ஒபாமாவும் வாய முடிட்டாரு.. ஆனால் ஆய்வு செய்து பார்த்ததில் அந்த வீடியோ Youtube ன் community guideline க்கு எதிராகவே உள்ளது.
இதோ Youtube ன் community guideline:
Don’t Cross the Line என்ற தலைப்பிற்கு கீழ் உள்ள 6 வது விதி:
We encourage free speech and defend everyone’s right to express unpopular points of view. But we don’t permit hate speech (speech which attacks or demeans a group based on race or ethnic origin, religion, disability, gender, age, veteran status, and sexual orientation/gender identity).
வேறுக்கத்தக்க பேச்சு – ஒரு மதத்தை தாக்கி அல்லது அவமதிக்கும் பேச்சை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மேற்கண்ட விதியில் கூறப்பட்டுள்ளது.
உலக முஸ்லிம்கள் கொந்தளித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் அளவிற்கு வெறுக்க தக்க பேச்சாக ஒரு மதத்தை அவமதித்து தாக்கி தயாரிக்கப்பட்டுள்ள அந்த வீடியோ மேற் கண்ட விதி முறைப்படி நீக்க பட வேண்டும்.
ஆனால் கூகுள் அது விதிமுறைக்கு உட்பட்டே இருக்கி்ன்றது எனக் கூறி அதை நீக்க மறுப்பதோடு பலரையும் பார்க்க தூண்டும் படி முகப்பிலேயே இன்னமும் வைத்துள்ளது. (இந்த செய்தி வெளியிடும் வரை)
——-
குறிப்பு – முகப்பில் ஒருவன் பெயரில் இருந்த வீடியோவை இந்தியாவில் மட்டும் தற்போது  நீக்கியுள்ள Youtube அந்த வீடியோவின் படத்தை இன்னமும் முகப்பிலேயே தான் வைத்துள்ளது. அதை கிளிக் செய்தால் நீக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வருகின்றது.  மேலும் பல பெயர்களில் அந்த வீடியோ Youtube ல் இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
இந்திய நேரப்படி  இன்று (18-92012) மாலை 6 மணிக்கு எடுக்கப்பட்டு Youtube home page ன் screen shot தொடர்ந்து 4 நாட்களாக home page ல் அந்த வீடியோ இடம் பெற்றுள்ளது.
————
ஆக கூகுள் என்ன நினைக்கின்றது?: ”இந்த வீடியோ எந்த மதத்தையும் தாக்கவில்லை அதில் சொல்லப்பட்டுள்ளவைகள் உண்மையானவைகள் தான்”
வீடியோ விதிமுறைக்கு உட்பட்டு தான் இருக்கின்றது எனக்கு கூறி உலக நாடுகளை கூகுள் ஏமாற்றி வருகின்றது.
நமக்கு தெரிந்த இந்த செய்தி ஒபாமாவுக்கும்  தெரியாமலா இருக்கும் ? ஆக ஒபாவும் கூகுளோடு சேர்ந்து நாடகமாடுகின்றார் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வீடியோவை Google ம் அமெரிக்க அரசும் பொய்க் காணரத்தை கூறி இன்னமும் நீக்காமல் வைத்திருப்பதின் பின்னனி என்ன ?
வேறு என்னவாக இருக்கு முடியும் ? எல்லா நாடுகளிலும் அசுர வேகத்தில் இஸ்லாம் வளர்ந்து வருகின்றது.
அதை தடுக்க இஸ்லாத்தை பின் பற்றும் முஸ்லிம்கள்  மீதும் இஸ்லாத்தின் மீதும் அவமதிப்பை ஏற்படுத்த வேண்டும்.
அதற்கு வழி , அவர்களை கொபமடையச் செய்து வன்முறைகளுக்கு தூண்டி விடுவது.  அதற்கு இந்த வீடியோவை பயன்படுத்தியுள்ளனர்.
இஸ்லாத்தின் பால் வருபவர்கள், முஸ்லிம்களை பார்த்து வருவதில்லை, மாறாக தூய இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை கோட்பாடுகள் பிடித்தே வருகின்றனர் என்பது இந்த சதி காரர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான். (அல்குர்ஆன்: 61 :08 )

யூ டியூப் பாவனையை பகிஷ்கரிக்குமாறு உலகளவில் வேண்டுகோள்!!!!!!

Posted in

முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து அமேரிக்கர்களாலும் யூதர்களாலும் உருவாக்கப்பட்ட திரைப்படம் யூ டியூப் இணையத்தினூடாக உலகளவில் பரப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இந்த வீடியோ காட்சிகளை யூ டியூப் இணைத்தளத்திலிருந்து விடுவிக்கக் கோரி உலகளவில் எதிர்ப்பு நடைவடிக்கையொன்றை மேற்கொள்ள உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் அமைப்புக்கள் தயாராகியுள்ளன. இதற்கமைவாக எதிர்வரும் 20, 21, 22ம் திகதிகளில் யூ டியூப் இணையத்தளத்தினை பாவிப்பதிலிருந்து உலகெங்கிலுமுள்ள 22 மில்லியன் முஸ்லிம் இணைய பாவனையாளர்கள் தவிர்ந்து கொள்ளவுள்ளனர். இது ஒரு உலக சாதனையான எதிர்ப்பு நடவடிக்கையாகும். 
இந்த 03 நாட்கள் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் யூ டியூப் இணையத் தள பாவனையைத் தவிர்ப்பதன் மூலம் குறித்த நிறுவனத்திற்கு பாரியளவில் நஷ்டமேற்படும் என்பதோடு அந்த அசிங்கமான வீடியோ காட்சிகளை விடுவிக்க பாரியதோர் அழுத்தத்தினையும் கொடுக்க முடியும். 
ஆகவே நீங்களும் முஸ்லிமாக இருந்தால் அல்லது இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பளிப்பவராக இருந்தால் சர்வதேச முஸ்லிம்களோடு இணைந்து குறித்த 03 நாட்கள் யூ டியூப் பாவனையைத் தவிர்ந்து உலகளாவிய எதிர்ப்பை வெளிக்காட்டவும். 

Please inform and invite all Muslims to boycott Youtube on 20, 21 & 22 of September 2012 to record protest for film against Islam. 22 million internet users of Muslims can realize them to remove this video from Youtube and can show the world that we love our Prophet Mohammed S.A.W.W. Please forward this message to all Muslims. (Sources : Universal Muslims)

முஸ்லிம் காங்கிரஸின் முடிவு குறித்து உயர்பீட உறுப்பினர்கள் பலர் அதிருப்தி

Posted in

 

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறு கை யில், அரசியல் தீர்மானங்களை மேற்கொள்கை யில் அண்மைக்காலமாக ஸ்ரீ லங்கா முஸ் லிம் காங்கிரஸுக்குள் முரண்பட்ட செய ற்பா டு களே ௭ழுந்துள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அப்பிரதேச முஸ் லிம் மக்களின் விருப்பமானது அரசுடன் இணை ந்து செயற்படுவது அல்ல. 

மாறாக தனி த்துவமான முஸ்லிம் கட்சியொன்றின் முதல மைச்சரை நியமிப்பதேயாகும். இதன் அடிப்படையிலேயே பிரசா ரங்க ளை யும் முன்னெடுத்தோம். கிழக்கு மாகாண முஸ் லிம் மக்கள் மரச்சின்னத்தை நம்பி வாக் க ளித்தனர். 

ஆனால் தற்போது ௭வ்வகையான பய னும் அற்ற நிலையில் வெறும் பதவி களு க் காக அரசுடன் இணைந்து கிழக்கு மாகா ண த்தில் செயற்பட மு.கா. முடிவு செய் துள்ள மை யா னது பலரது ௭திர்ப்பையும் தாண்டி ௭டுக்க ப்ப ட்ட தீர்மானமாகும். இதனால் தலைமைப்பீடத்துடன் முறுகல் நிலை தோன்றியுள்ளதுடன் தீர்க்கமான முடி வு களை ௭டுக்க வேண்டிய நிலையில் பல ரும் உள்ளனர் ௭ன்றார்.

கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்ப த ற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத் துக்கு ஆதரவு வழங்க முன்வந்தமை தொடர் பில் கட்சியின் உயர்பீட உறுப் பி னர் கள் பலர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். 

தன் னி ச் சையாக செயற்படும் தலை மைத் துவ த் தினால் கட்சியின் ௭திர்காலமும், முஸ்லிம் சமூக ௭திர்பார்ப்புகளும் கேள்வி க்குறியா கி வி ட் டுள்ளன ௭ன்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸின் உயர்பீட சிரேஷ்ட உறுப்பினர் ஒரு வர் தெரிவித்தார். 


SLMC பற்றி விமர்சிக்க ஆசாத் சாலிக்கு அருகதை கிடையாது-ஏ.எம்.ஜெமீல்

Posted in

முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காணும் நோக்குடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் தீர்க்க தரிசனத்துடன் மேற்கொள்ளும் தீர்மானங்களை விமர்சிப்பதற்கு ஆசாத் சாலிக்கு எந்த அருகதையும் கிடையாது என்று அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயரும் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவருமான ஆசாத் சாலி முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பில் ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் விமர்சனங்களை கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
‘நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது கிழக்கின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக எழுச்சி பெற்றிருப்பதன் காரணமாக கிழக்கில் நல்லாட்சி ஒன்றை அமைக்கும் கடிவாளம் முஸ்லிம் காங்கிரசின் கரங்களில் கிடைத்திருக்கிறது.
அந்த வகையில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை நிறுவுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டிருக்கும் தூரநோக்குடனான தீர்மானம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறுகிய சிந்தனைகளுக்கு அப்பால் பரந்த மனப்பாங்குடன் நீண்ட கால அடிப்படையில் யதார்த்தபூர்வமாக சிந்திக்கும் போது கட்சியின் முன்னெடுப்புகள் யாவும் சிறப்பாக அமைந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் கண்ட பல கனவுகளை நனவாக்கும் வகையில் இந்த சந்தர்ப்பத்தை எமது தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று நான் பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன். மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இனப்பிரச்சினை தீர்வொன்றின் போது கிழக்கில் முஸ்லிம் மாகாணம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வந்துள்ளார். ஆனால் இன்று இனப்பிரச்சினை தீர்வுக்கு அப்பால் முழுக் கிழக்கு மாகாணமும் ஒரு முஸ்லிம் மாகாணமாக பரிணமிக்கும் வகையில் முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் சக்தி பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லிம் ஒருவரை முதலமைச்சர் ஆசனத்தில் அமர்த்தியிருப்பதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் இந்த சாதனையை நிலை நாட்டி இருக்கிறது. ஆனால் கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது ஆளும் தரப்பில் அதிகமான முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும் முஸ்லிம் முதலமைச்சர் என்பது அதாவுல்லாஇ றிசாத் பதியுதீன் போன்றோரின் வெறும் கோஷங்களுடன் புஷ்வானமாகி போன வரலாற்றை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்போது இந்த மாற்றுத் தலைமைகள் நிபந்தனைகள் எதுவுமின்றி சமூகத்திற்கு துரோகமிழைத்து விட்டு அரசுக்கு முற்றாக சோரம் போன சோக நிகழ்வானது ஒரு கறை படிந்த வரலாறாகும்.
இம்முறை கூட எமது முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் கடிவாளத்தை கையில் எடுத்திருக்கா விட்டால் இந்த மாற்றுத் தலைமைகள் அதே வரலாற்றுத் துரோகத்தை இந்த முஸ்லிம் சமூகத்திற்கு செய்திருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.
ஆனால் எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் முதலமைச்சர் என்கின்ற விடயத்தில் விடாப்பிடியாக நின்று அதனை வெற்றி கொண்டிருகிறார். அத்துடன் சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கும் அரசிடம் தீர்வு கோரி அவற்றுக்கான உத்தரவாதங்களைப் பெற்றுள்ளதுடன் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றும் நீண்ட கால அபிலாஷைகள் தொடர்பில் அரசுடன் எழுத்து மூலமான ஒப்பந்தமொன்றையும் செய்து கொண்டே அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு எமது தலைமைத்துவம் உடன்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூக நிர்வாக விடயங்கள் குறித்த அதிகாரங்கள் தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டு அவற்றை குறுகிய காலத்தினுள் அமுல் நடத்துவதற்கான உத்தரவாதங்களும் அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
ஆனால் யதார்த்தங்கள் – சாத்தியப்பாடுகள் குறித்து சற்றும் சிந்திக்காமல் முதலமைச்சர் பதவி ஒன்றுக்காக மட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைய வேண்டும் என்பதே ஆசாத் சாலி எழுப்பும் கோஷமாகும். ஆனால் அரசுடன் இணைந்து முதலமைச்சர் பதவிக்கு தாம் விரும்பிய ஒரு முஸ்லிமை நியமித்துக் கொண்டு இரண்டு பலம் பொருந்திய மாகாண அமைச்சுகளை பெறும் வாய்ப்பை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாண சபை அமைச்சரவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கும்.
இவற்றை விட கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாமல் அதற்கு வெளியிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் ஒட்டு மொத்தமான இருப்பு, பாதுகாப்பு என்பவற்றுக்கான உத்தரவாதங்களும், அவர்களது கல்வி, கலாசார, சமய, அரசியல், சமூக, பொருளாதார, பிரச்சினைகளுக்கான தீர்வுகளும், நிவாரணங்களும், மத்திய அரசின் தயவின்றி பெற முடியாத யதார்த்தத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.
எனினும் ஆசாத் சாலி இவற்றை எல்லாம் கருத்திற் கொள்ளாமல் எழுந்தமானமாக – ஒரு பக்க சார்பாக நின்று கட்சியையும் தலைமைத்துவத்தையும் கண்மூடித்தனமாக விமர்சித்திருப்பதானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். உண்மையில் கட்சியில் எந்தவொரு அதிகாரபூர்வமான அந்தஸ்த்தையும் வகிக்காத நண்பர் ஆசாத் சாலிக்கு முஸ்லிம் காங்கிரசையோ தலைமைத்துவத்தையோ விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையோ தார்மீக உரிமையோ கிடையாது.
முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களோ உயர்பீட உறுப்பினர்களோ அடிமட்ட போராளிகளோ தலைமைத்துவம் மீது கிஞ்சித்தும் சந்தேகம் கொள்ளாத நிலையில் எமது கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட வந்த நண்பர் ஆசாத் சாலி வீண் சந்தேகங்களையும் விமர்சனங்களையும் புரளிகளையும் கிளப்பி விட்டு கட்சிக்கெதிரான சக்திகளுக்கு தீனி போட முற்பட்டிருப்பதானது அவர் ஏதோ ஒரு சக்தியின் முகவராக செயற்படுகிறார் என்பதையே புலப்படுத்துகிறது. அந்த சக்தியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இவரது கருத்துகள் வெளிப்படுகின்றன என்றே நாம் உணர்கின்றோம்.
எவ்வாறாயினும் கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டு இவ்வாறு ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டு எமது கட்சிக்கு எதிராக சதி நடவடிக்கைகளில் ஈடுபடும் தனி நபர்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சமாட்டோம். அது எத்தகைய பெரும் சக்தியின் சதியாக இருந்த போதிலும் அதனை முறியடித்து முஸ்லிம் சமூகத்தின் பேரியக்கமான இந்த கட்சியை தொடர்ந்தும் வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வதற்கு போராளிகள் என்றும் தயாராகவே இருக்கின்றனர் என்பதை ஆசாத் சாலிக்கும் அவரை இயக்குகின்ற சக்திகளுக்கும் இளைஞர் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் ஆணித் தரமாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமியர்கள் வரலாறு காணாத போராட்டம் – ஸ்தம்பித்தது சென்னை

Posted in

இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் உலகம் கொந்தளித்துப் போனது. பல்வேறு நாடுகளில்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்தியாவின் தென்கோடி பகுதியான தமிழகத்திலும் தினந்தோறும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் செனனை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது. இதுவரை இப்படி ஒரு போராட்டத்தை அண்ணா சாலை கண்டதில்லை என்பதால் சென்னையே சில மணி நேரம் ஆடிப் போய் விட்டது.
இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் முன் நேற்று 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் அமெரிக்க துணை தூதரகம்  3 நாட்களுக்கு மூடப்பட்டது. மேலும், தூதரகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டது.  மேலும் அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு அண்ணா சாலை தர்கா அருகே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அண்ணா சாலையில் இதுவரை எந்தப் போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டதில்லை.  மேலும் போராட்டத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் மாலை 3 மணி முதலே போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
அண்ணா சாலை முழுவதும் இஸ்லாமியர்கள் கொடிகளை ஏந்தியபடி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே அமெரிக்க தேசியக் கொடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் அண்ணா சாலை தர்கா அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அமெரிக்காவுக்கு எதிராக கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர்.
உலக மக்கள் அனைவருக்கும் உன்னத தத்துவங்களை போதித்த இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் இந்த திரைப்படம் இஸ்லாமியர்களின் மத உணர்வை  புண்படுத்தியிருப்பதால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும், இந்தியா தனது கண்டனத்தை பதிவுச் செய்ய வேண்டும் எனவும்  அவர்கள் வற்புறுத்தினர்.
20க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அங்கு குவிந்ததால் அண்ணா சாலை வரலாறு காணாத அளவுக்கு ஸ்தம்பித்தது.
இப்போராட்டத்தால் மயிலாப்பூர், ராயப்பேட்டை, அண்ணாசாலை ஆகிய தென்சென்னை பகுதிகள் ஸ்தம்பித்துப் போயிருந்தன. மேலும்  மத்திய சென்னை பகுதிகளான எழும்பூர், சிந்ததாரிப் பேட்டை வழியே பேருந்துகள் திருப்பிவிடப்பட்டதால் அந்தப் பக்கமும் வாகனங்களால் நிலைகுலைந்து போனது. சென்னையில் பல மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.(தூதுஒன்லைன்)

அமீர் அலிக்கு பிரதி அமைச்சர் பதவி?

Posted in

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அமீர் அலி தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதோடு அவருக்கு பிரதி அமைச்சர் பதவி ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் உறுதிப்படுத்தினார்.
கிழக்கின் முதலமைச்சராக தமது கட்சிகள் சார்பில் அமீர் அலி நியமிக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவரான அமைச்சர் அதாவுல்லா ஆகியோர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தி இருந்தனர்.
எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பலத்த எதிர்ப்பு காரணமாக நஜீப் அப்துல் மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை அமீர் அலிக்கு கிழக்கு மாகாண சபையில் அமைச்சு பதவி கூட ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில் அமைச்சர் றிசாத் ஜனாதிபதி மஹிந்தவுடன் இன்று காலை நடத்திய பேச்சுவார்த்தையில் அமீர் அலியை தேசிய பட்டியல் மூலம் எம்.பி.யாக நியமித்து பிரதி அமைச்சர் பதவி ஒன்றை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
இதன் நிமித்தம் தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை அமீர் அலி ராஜினாமா செய்வார் என்றும் வை.எல்.எஸ்.ஹமீட் குறிப்பிட்டார்.

ஓட்டமாவடியில் அமேரிக்க எதிர்ப்புப் பேரணி! அணிதிரண்டு வாருங்கள்!!

Posted in
முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து திரைப்படமொன்றை அமேரிக்கர்களும் யூதர்களும் சேர்ந்து வெளியிட்டுள்ளமையை வன்மையாகக் கண்டித்து உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டி வரும் நிலையில் எமது ஓட்டமாவடி முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைத்து எதிர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 21.09.2012 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் ஓட்டமாவடியிலிருந்து ஆரம்பித்து நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் எதிர்ப்புப் பேரணியில் பிரதேசத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் கட்டாயம் பங்குபெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

சர்ச்சைக்குரிய 'Innocence of Muslims' திரைப்படத்தின் காணொளிகளை நீக்கமறுத்த கூகுள்

Posted in
பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ள 'Innocence of Muslims' என்ற திரைப்படத்தின் காணொளிகளை யூ டியூப்பில் இருந்து காணோளியை நீக்குமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை கூகுள் நிறுவனம் நிராகரித்துள்ளது.

இந்தப் படத்தின் சில பகுதிகள் யூ டியூப்பில் வெளியானதையடுத்து எகிப்து, லிபியாவில் பயங்கர கலவரம் வெடித்து மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார்.
 

இந் நிலையில் இந்த வீடியோவை நீக்குமாறு அமெரிக்க அரசு விடுத்த வேண்டுகோளை கூகுள் நிராகரித்துள்ளது.


இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கூகுள் இணைய தள நிறுவனம், எகிப்து மற்றும் லிபியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அந்நாடுகளில் யூ டியூப் வீடியோ காட்சிகள் தடை செய்யப்பட்டன. பின்னர் அந்த வீடியோ காட்சிகளை இந்தியா மற்றும் இந்தோனேசியாவிலும் தடை செய்திருக்கிறோம்.

தற்போது பதிவேற்றப்பட்டிருக்கும் காட்சிகள் எமது நிறுவன நிபந்தனைகளுக்குட்பட்டதுதான் என்று கூறியுள்ளது.

ஈரானை இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்கலாம்?: அமெரிக்க, பிரித்தானிய படைகளும் வளைகுடா நோக்கிப் படையெடுப்பு!

Posted in

ஈரானின் அணு உலைகளை இலக்குவைத்து இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை வளைகுடாவில் தோன்றியுள்ளதுடன் அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் வளைகுடாப் பகுதியை நோக்கிப் படையெடுத்துள்ளன.
 
 இருபத்தைந்து நாடுகளின் போர்க்கப்பல்கள், விமானந் தாங்கிக் கப்பல்கள், நீர்மூழ்கிகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணைப்  (Strait of Hormuz) பகுதியில் இதுவரை இல்லாத அளவில் அவை  மிகப்பெரிய போர் ஒத்திகையை அங்கு நடத்தவுள்ளன.
 
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணையின் ஊடாக தினசரி 18 மில்லியன் மசகெண்ணெய் பெரல்களைக் கப்பல்கள் கொண்டுசெல்கின்றன.
 
இந்த வழியைத் தடைசெய்யப்போவதாக  ஈரான் பல மாதங்களாக எச்சரித்து வருகின்றது. இதன்மூலம் உலக நாடுகள் பலவற்றினை ஸ்தம்பிக்க வைக்கமுடியுமென ஈரான் கருதுகின்றது.
 
இந்நீரிணையூடான வழியை மூடுமானால் ஈரான் மீது தாக்குதல் நடத்த உலகநாடுகள் பல தயாராகவுள்ளன.
 
ஈரான் மீது இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுவதால் இப்பாதையை ஈரான் தடைசெய்யலாம என்ற அச்சம் உலகநாடுகள் பலவற்றுக்கு ஏற்பட்டுள்ளது.
 
இதன் எதிரொலியாகவே உலகநாடுகள் பலவற்றின் படைகள் அப்பகுதியில் நிலைகொள்ளத்தொடங்கியுள்ளன. அவை அங்கு கூட்டாகப் போர் ஒத்திகைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிகின்றது.
 
 
ஈரானிடம் அதிநவீன தொழில்நுட்பங்கள் இல்லாதபோதிலும் சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல்கள், அதிவேக தாக்குதல் படகுகள் போன்றவற்றின் மூலம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய கப்பல்களை அது தாக்கலாம் என நம்பப்படுகின்றது.
 
இதேவேளை ஈரான் அடுத்தமாதம் வரலாறு காணாத மிகப்பெரிய போர் ஒத்திகை நடவடிக்கையொன்றை நடத்தவுள்ளதாகத் தெரியவருகின்றது.
 
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுமானால் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சாது என அந்நாட்டின் புரட்சிகரப் படையின் கட்டளைத் தளபதி  ஜெனரல் மொஹமட் அல் ஜபாரி எச்சரித்துள்ளார்.
 

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம்: அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை

Posted in
நபிகள் நாயகத்தை அவதூறாக சித்திரித்து தயாரிக்கப்பட்ட சினிமாப் படத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து மத்திய கிழக்கு நாடுகளில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்கத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். லிபியாவில் தூதரக அதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 

ஏமனில் நடந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். இது போன்று சூடான், துனிசியா உட்பட பல நாடுகளில் அமெரிக்கத் தூதரங்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும் பங்குள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரங்கள் மீது மேலும் தீவிர தாக்குதல்கள் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக அரோபிய தீபகற்பத்தில் தாக்குதல் நடத்த தங்கள் ஆதரவாளர்களுக்கு உத்தர விட்டுள்ளனர். 

எனவே, அந்த நாடுகளுக்கு அமெரிக்கர்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும்படி சூடான் மற்றும் துனிசியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. 

சூடானில் உள்ள கார்போம் நகரில் அமெரிக்கத் தூதரகம் உள்ளது. அங்கு நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, அங்கிருக்கும் ஊழியர்களைக் காப்பாற்ற சிறப்பு அதிரடிப்படையைப் பாதுகாப்புக்கு அனுப்பும்படி அமெரிக்கா விடுத்த கோரிக்கையை சூடான் நிராகரித்தது. எனவே அங்கிருந்து தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற அமெரிக்கா உத்தர விட்டுள்ளது. இதே போன்று ஏமன் அருகேயுள்ள துனிசியாவில் இருந்தும் ஊழியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்.

ஜனாதிபதியின இந்திய விஜயத்தை எதிர்த்து தீக்குளித்த நபர் மரணம்

Posted in
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்தை எதிர்த்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான விஜய்ராஜ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு தமிழர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று அதிகாலை தீக்குளித்தார்.

பின்னர் தீக்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் அவர் உயிரிழந்தார்.

வாழ்த்துக்கள்!!!

Posted in
இலங்கையில் முதன்முதலாக முஸ்லிம் முதலமைச்சராக தெரிவாகியுள்ள நஜீப் ஏ மஜீத் அவர்களுக்கு எமது ஓட்டமாவடி செய்திச் சேவையின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

இந்திய இராணுவ ரகசியங்களுடன் இலங்கைக்கு தப்பிச் செல்ல முற்பட்டவர் கைது!

Posted in

இந்திய ராணுவ ரகசியங்கள் அடங்கிய சிடியுடன் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற தமீம் என்ற நபர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.
இலங்கைக்கு செல்ல முயன்ற தமீம், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் தமீமிடம் இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய சிடி இருப்பதாக க்யூ பிரிவு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் தமீமை பொலிசார் கண்காணித்து சுற்றி வளைத்தனர். அப்போது இந்திய ராணுவ ரகசியங்கள் அடங்கிய சிடியுடன் இலங்கைக்கு செல்ல தமீம் முயற்சித்தது தெரியவந்தது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாகவும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் சிடியை கொடுக்க சென்றதாகவும் பொலிசில் தமீம் கூறியுள்ளார்.
இதையடுத்து தமீம் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பிறகு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்டோபர் துதலாம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே தமீமை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

Congratulations For 1st Muslim Chief Minister in History

Posted in
We Oddamavadi news, warmly congratulating the Newly elected Chief Minister to Eastern Province  Mr. Najeeb Al Majeed. HE IS THE FIRST MUSLIM CHIEF MINISTER IN SRI LANKAN POLITICAL HISTORY. 

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் சத்தியப் பிரமாணம்

Posted in

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அரசாங்கத்திற்கு மிடையில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான ஒப்பந்ததத்தை தொடர்ந்தே  இவர் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினராகிறார்???????

Posted in
இம்முறை இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டி இட்டு வெற்றி பெற்று பலராலும் முதலமைச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட அமீர் அலி அவர்கள் பாராளுமன்றஉறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பான செய்தித் தொகுப்பு விரைவில்………………

கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்படவுள்ளார்?

Posted in

கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்படவுள்ளார் என நம்பகமாக தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடனேயே நஜீப் ஏ மஜீத் கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என நம்பகமாக அறிய முடிகின்றது.
முதல் இரண்டரை வருடங்களுக்கு நஜீப் ஏ மஜீதும் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இந்த முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண அமைச்சுக்கள் இரண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் மற்றைய அமைச்சுக்கள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தனுக்கும், விமல வீர திஸாநாயக்கவுக்கும் வழங்கப்படவுள்ளன.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் பதவி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதி நிதிக்கும் பிரதி தவிசாளர் பதவி தேசிய காங்கிரசுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அரசாங்கத்திற்கு மிடையில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான ஒப்பந்தமொன்று நாளை கைச்சாத்தாகவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனையை மேலதிக மாவட்டமாக அங்கீகரிப்பதெனவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேச மொன்று தனியான பிரதேச சபையாகவும் திருகோணமலை மாவாட்டத்தில் பிரதேச சபையொன்று தனியான  பிரதேச சபையாகவும் அங்கீகரிப்பது உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக அந்த ஒப்பந்த்தில் குறிப்பிடப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்த ஒப்பந்தம் நாளை காலை (18.9.2012) தயாரிக்கப்பட்டு மாலை அல்லது நாளை மறுதினம் புதன்கிழமை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இன்று மாலை அரசாங்க பிரதி நிதிகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்விம் காங்கிரஸ் பிரதி நிதிகளுக்குமிடையில் இது தொடர்பிலான பேச்சவார்த்தையொன்று நடைபெற்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, மற்றும் சசில் பிறேம் ஜயந்த, டளஸ் அழகப்பெரும, அநுறபிரியதர்சன யாப்பா, மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் றஊப் ஹக்கீம் மற்றும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் செயலாளர் ஹசன் அலி உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது மேற்படி விடயங்கள் பேசப்பட்டதாகவும் அதில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்ட தாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை செவ்வாய்க்கிழமை (18.9.2012) காலை புதிய முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி நிதிகள் மற்றும் அரசாங்க தரப்பு பிரதிகள் சந்திக்கும் சந்திப்பொன்றும் நடை பெறவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆப்கான் போலீஸ்காரர் சுட்டு 4 நேட்டோ படையினர் பலி!

Posted in

ஆஃப்கானிஸ்தான் போலீஸ்காரர் ஒருவர் நான்கு நேட்டோ ஆக்கிரமிப்பு ராணுவத்தினரை சுட்டுக் கொலைச் செய்துள்ளார். தெற்கு ஆஃப்கானிஸ்தானில் ஸபூல் மாகாணத்தில் செக்போஸ்டில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு பிறகு ஐந்து ஆஃப்கான் போலீசாரை காணவில்லை. ஆனால், துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரரை நேட்டோ படையினர் கொலைச் செய்துள்ளனர். காணாமல் போன போலீசாருக்கு துப்பாக்கிச்சூட்டில் தொடர்பு இருக்கிறதா? என்பது உறுதிச் செய்யப்படவில்லை. ஆனால், பயந்துபோய் இவர்கள் தலைமறைவாகியிருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடந்த சம்பவத்தின் மூலம் இவ்வாண்டு ஆஃப்கானிஸ்தானில் போலீஸ் காரர்களின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகும் நேட்டோ ஆக்கிரமிப்பு ராணுவத்தினரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. தெற்கு ஆஃப்கானிஸ்தானில் ஹெல்மந்தில் உள்ள செக்பாயிண்டில் நேற்று முன்தினம் 2 பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை ஹெல்மந்த் ராணுவ தளத்தில் ராணுவ சேவைப்புரிய வந்த இளவரசர் ஹாரியைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 2 அமெரிக்க கப்பற்படையினர் கொல்லப்பட்டனர். நேட்டோவின் 6 போர் விமானங்கள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் தகர்க்கப்பட்டன.
அண்மைக் காலமாக நேட்டோ ஆக்கிரமிப்பு படையினர் தாலிபான் போராளிகள் மற்றும் ஆஃப்கான் போலீசாரின் தாக்குதலில் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.
அதனிடையே, நேட்டோ படையினர் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் லக்மான் மாகாணத்தில் விறகு பொறுக்கச் சென்ற அப்பாவி பெண்கள் எட்டுபேர் பலியானார்கள். பலியான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உடல்களை ஊர்மக்கள் மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு கொண்டு சென்றதாக மாகாண செய்தித் தொடர்பாளர் ஸர்வாதி ஸிவாக் கூறினார். தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏழுபேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நேட்டோ படையினர் தாக்குதலில் 45 போராளிகள் கொல்லப்பட்டதாக பொய்யை கூறுகிறது. (தூது ஒன்லைன்)

இறைத்தூதரை அவமதிக்கும் செயலை தண்டனைக்குரிய குற்றமாக சட்டமியற்ற வேண்டும் – சவூதி தலைமை முஃப்தி கோரிக்கை

Posted in

முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் செயலை தண்டனைக்குரிய குற்றமாக கருதி சட்டமியற்ற வேண்டும் என்று உலக நாடுகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் சவூதி அரேபியாவின் தலைமை முஃப்தி (மார்க்க தீர்ப்பு வழங்குபவர்) ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் ஷேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியது:
“அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராடுவோர் வன்முறையில் இருந்து விலகவேண்டும். முஸ்லிம்கள் கோபத்திற்கு அடிமையாகிவிடக் கூடாது. நிரபராதிகளை கொலைச் செய்வதையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் தவிர்த்து இத்தகைய திரைப்படங்களை தயாரிப்போரின் லட்சியங்களை நிறைவேற்றாமல் இருப்பதில் முஸ்லிம்கள் கவனம் செலுத்தவேண்டும்.” இவ்வாறு ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் ஷேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இஸ்லாத்தின் புனிதங்களை அவமதிப்பதை சர்வதேச அளவில் தடைச் செய்யவேண்டும் என்று எகிப்தில் உயர் முஸ்லிம் அறிஞரும், அல் அஸ்ஹர் இமாமுமான ஷேக் அஹ்மத் அல் தய்யிப் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், நிரபராதிகள் தாக்கப்படக் கூடாது என்று அவர் கூறியுள்ளார். (தூது ஒன்லைன்)

கிழக்கின் சிறுபான்மை ஆட்சி ! நனவாகிய கனவு நீடிக்குமா ? முதலமைச்சரும் ஆள்பவரும் யார் என்பதில் இழுபறி !

Posted in

ன்னதான் கூறினாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ளுர ஒரு பெருமைதான். தாங்கள்தான் ஆட்சியமைப்பதில் ஜாம்பவான்கள் என்பதில்தான் இத்தனை பெருமை. ஆனால் பாவப்பட்டவர்களாக வாக்களித்த மக்கள் வாயைப்பிளந்து கொண்டு என்ன நடக்கப்போகிறது என்று ஆளையாள் மாறி மாறிக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தாங்கள் தான் ஜாம்பவான்கள் என்று கூறியவர்கள் இன்னமும் அந்த மாகாணசபையின் ஆட்சி பற்றி உறுதியான தீர்மானமான முடிவு எதனையும் எடுக்க முடியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய ஒரு நிலைமைக்கு அவர்கள் சமூகத்தைப்பற்றி ஆளமாகச் சிந்திப்பதுதான் காரணம் என்று எமது வாசகர்கள் அவசரப்பட்டு முடிவெடுத்து விடக்கூடாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அது அரசோடு கொண்டுள்ள உறவுகள், பட்டம் பதவி, அந்தஸ்து மற்றும் இன்னபிற சலுகைகள் என்பன போன்ற விடயங்களில் மிகக் கவனமாகக் காய் நகர்த்தி இருப்பதையும் இழந்து விடாமல் இன்னும் கூடுதலாக அடைந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.
இதேவேளை இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமது முஷ்டியை உயர்த்திக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தவம் கிடக்கிறது. தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கு அரசு அழைத்தால் அதுபற்றிப் பரிசீலிக்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் சனியன்று கூறினார். ஆனால், மறுநாளோ முஸ்லிம் காங்கிரசுக்காக பரிந்து பேசுகிறார்.
முஸ்லிம் காங்கிரஸ் நாகரிகமில்லாமல் நடந்து கொண்டு தங்களுடனான சந்திப்பைத் தட்டிக்கழித்து விட்டது என்று பாராளுமன்ற உறுப்;பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் முன்னதாகக் கூறியிருந்தார். வெள்ளிக்கிழமை இரவு தங்களைச் சந்திக்க வருவதாகக் கூறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் தங்களை வந்து சந்திக்காதது ஒரு புறமிருக்க காத்திருக்க வைத்து விட்டு தொலைபேசிகளையும் நிறுத்தி வைத்து விட்டு அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் என்று அவர் ஊடகங்களுக்கு சொல்லியிருந்தார்.
இச் சந்திப்புப் பற்றி கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ‘கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்க முடியாத நிலைமை தொடர்வது உண்மை. தேர்தல் சுதந்திரமாக நேர்மையாக நடந்திருந்தால் நாங்கள் இன்னும் அதிகளவான ஆசனங்களைப் பெற்றிருக்கலாம். தெரிவு செய்யப்பட்ட மற்றத் தமிழ் உறுப்பினரான முன்னைநாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர் தெரிவு செய்யப்பட்ட விதம் குறித்தும் பல கேள்விகள் எழுப்பப் படுகின்றன. அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதுதான் பொதுவான கருத்து. தமிழ் மக்கள் மிகவும் கூடுதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தார்கள். முஸ்லிம் மக்கள் கூடுதலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆதரித்தார்கள்.
எங்களுடைய தேர்தல் பிரசாரத்தின் அடிப்படையில் இந்த இரண்டு கட்சிகளும் ஆளுங்கட்சியை எதிர்த்தன. மக்கள் வழங்கியிருக்கின்ற ஆணையின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைப் பொறுப்பெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் தமது வாக்குகளை வழங்கியிருக்கின்றார்கள். அதுதான் மக்களுடைய தெளிவான முடிவு தேர்தல் நடந்த பொழுது அவ்விதமான பிரச்சாரம்தான் இடம்பெற்றது. தேர்தல் முடிந்த பிறகு மக்கள் மிகவும் கூடுதலாக அவ்வாறுதான் எதிர்பார்த்தார்கள். அவ்விதமான ஆட்சிதான் ஏற்பட வேண்டுமென்ற கருத்தைப் பகிரங்கமாகக் கூறிவந்திருந்தார்கள்.
ஆனால், அரசாங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பதற்கு முயற்சியெடுத்து வந்திருக்கின்றது. எங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையில் தொடர்பு இருந்து வந்திருக்கின்றது. அதன் தலைவர் றவூப் ஹக்கீம், மற்றும் அதன் முக்கியஸ்தர்களும் அந்தக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார்கள். முழுமையாக நாங்கள் மக்களுடைய எதிர்பார்ப்புக்களைப்பற்றித் தெளிவாக விளக்கினோம்.
தாங்கள் அரசுடன் பேசிய போதிலும் கூட இற்றை வரையில் அத பற்றி இன்னமும் ஒரு முடிவெடுக்கவில்லை என்று எமக்குக் கூறினார்கள். அந்த அடிப்படையிலேயே எமது கருத்துக்களை மிகவும் கவனமான பரிசீலனைக்குத் தாங்கள் எடுப்பதாகவும் அதுபற்றிச் சிந்தித்து மீண்டும் எம்முடன் பேசுவதாக அவர்கள் எமக்குத் தெரிவித்தார்கள். எமது பரஸ்பரக் கலந்துரையாடல் மிகவும் திருப்திகரமானதாக அமைந்தது’ என்றார் சம்பந்தன்.
இன்னும் யாராயினும் ஆட்சி அமைக்கவில்லை என்பது மக்களுடைய கவலைதானே என்று சம்பந்தனிடம் கேட்கப்பட்டபோது ‘இது மக்களுடைய கவலைக்கு அப்பாற்பட்;ட விடயம்’ என்று சம்பந்தன் பதிலளித்தார். ‘எங்களுடைய அத்தனை முயற்சியையும் நாங்கள் மேற்கொள்கின்றோம். இந்த விடயத்தில் எல்லோரும் பொறுமையாக இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனென்றால் நாம் இதுபற்றி இதற்கு முன்பும், தேர்தல் நடந்த பொழுதும், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பொழுதும் பத்திரிகையாளர் மாநாட்டிலும் இன்றும் பகிரங்கமாகவும் கூறிவருகின்றோம். உங்களால் சிபார்சு செய்யப்படுகின்ற ஒருவரை நாங்கள் முதலமைச்சராக நியமிக்கத் தயாராக இருக்கின்றோம். இது விடயமாக முஸ்லிம் சமூகம் எதுவிதமான சந்தேகங்களும் கொள்ள வேண்டிய அவசியமில்லை. மக்களுடைய விருப்பத்திற்கேற்ப நல்ல முடிவுகளை எடுக்குமாறும் நாம் முஸ்லிம் காங்கிரசிற்குச் சொல்லியிருக்கின்றோம்.’ என்றார் சம்பந்தன்.
‘நிச்சயமாக உங்களுக்கு வாக்களித்த முஸ்லிம் மக்கள் நீங்கள் எங்களுடன் சேர்ந்துதான் ஆட்சியமைக்க வேண்டுமென்று விரும்பி வாக்களித்தார்கள். அவ்விதமான பிரச்சாரம்தான் இடம்பெற்றது. எமது தமிழ் மக்களும் முஸ்லிம் முதலமைச்சரை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராய் இருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் காரர்களுக்கு சில பல பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றைப் பேசித் தீர்ப்பதற்கு நாங்கள் மிகவும் பொறுமையுடன் இருப்பது அவசியம். மக்கள் குழம்புவார்கள் என்பதற்காக நாங்கள் குழம்பிக் கொள்ள முடியாது. நாங்கள் பொறுப்புடன் பொறுமையாகச் செயற்பட வேண்டும்.
எங்களோடு சேர்ந்து ஆட்சியமைக்க முடியாது என்பதையோ அல்லது நாங்கள் அரசுடன் சேர்ந்து ஆட்சியமைக்கப்போகின்றோம் என்ற கருத்தையோ முஸ்லிம் காங்கிரஸ் கூறவில்லை. நாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து விட்டோம் எஎன்ற கருத்தையும் அவர்கள் கூறவில்லை. இந்த விடயத்தில் தங்களது கருத்தை மிக அவதானமாக உற்றுக்கவனித்து ஆலோசித்து வருகின்றோம் என்றுதான் அவர்கள் கூறியிருக்கி;னறார்கள். இந்த விடயத்தில் அவர்கள் தீர்க்கமான முடிவெடுப்பதற்கு போதியளவு கால அவகாசம் கொடுப்பதுதான் பொருத்தமான நிலைப்பாடு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கருதுகின்றது’ என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கும் பலர் அவாக் கொண்டுள்ளார்கள். இந்த விடயத்தில் கிழக்கில் செல்வாக்கை இழந்து 37 மாகாண உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் வெறும் நான்கு உறுப்பினர்களை மாத்திரம் வென்றெடுத்துள்ள அரசின் பரம வைரியான ஐக்கிய தேசியக் கட்சி, கிழக்கு மாகாண சபையை தேசிய அரசாக அமைத்து அதில் தனக்கும் ஒரு ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள நப்பாசை கொண்டுள்ளது. கிழக்கு மாகாணசபையின் தற்போதைய இழுபறி நிலைதான் தேடுவாரற்றுக் கிடக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இந்தளவுக்கு குரல் கொடுப்பதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி விட்டது.
தேசிய அரசு அமைப்பதற்காக பெரிய நிபந்தனைகளையும் அந்தக் கட்சி விதித்துள்ளது. இது கிழக்கில் ஸ்திரமான ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்ற நன்நோக்கத்தில் அல்ல, மாறாக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சரிந்து போயுள்ள அந்தக் கட்சி உள்ளுர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறது.
‘கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி இரண்டு வருடங்களுக்கு தமிழருக்கும், முஸ்லிமுக்கும் ஒரு வருட காலத்திற்கு சிங்களவருக்கும் தரப்பட வேண்டும் அத்துடன் காலத்தைக் கடத்தாமல் வட மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்துவதென்று அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்துவற்கான பொறிமுறைகளையும் அதற்கான கால எல்லைகளையும் அரசு தெரியப்படுத்த வேண்டும், இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு பற்றியும் அதன் கால எல்லை பற்றியும் அறிவிக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசு அமைப்பதற்கான முன்நிபந்தனைகளாக ஐக்கிய தேசியக் கட்சி விதித்துள்ளது.
வடக்கு கிழக்கு இணைந்த வரதராஜப் பெருமாள் தலைமையிலான முதலாவது மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் தாம் தெரிவு செய்யப்பட்டு ஆறு மாதம் கழிந்த நிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த அங்கத்தவரும் முதலாவது மாகாண சபை உறுப்பினருமான எஸ்.எல்.எம் ஹனீபா தெரிவித்தார். பல பின்னணிகளைக் கொண்டு தற்போது கிழக்கு மாகாண சபையின் சத்தியப் பிரமாண நிகழ்வும் ஆட்சியும் இழுத்தடிக்கப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார். ஒரே வார்த்தையில் சொன்னால் வாக்களித்த மக்கள் பாவப்பட்டவர்கள். courtesy: kky info

யாருக்கு ஆதரவென்பதை தீர்மானிக்கும் மு.கா.வின் விசேட கூட்டம் இன்று

Posted in
கிழக்கு மாகாணசபை எவ்வாறு அமையும் என்பதை தீர்மானிக்கும் சக்தியைப் பெற்றிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பையா அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பையா ஆதரிக்கும் என்பதை தீர்மானிப்பதற்கான விசேட கூட்டத்துக்கு வருமாறு மாகாணசபை உறுப்பினர்களாக தெரிவான தனது ஏழு அங்கத்தவர்களையும் அழைத்துள்ளது. 

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறுவதால் தொங்குநிலை காணப்படும் நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஆதரவைக் கோரியுள்ளன. 

ஆதரவு கோரும் இரு தரப்பினருடனும் எமது சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ரவூப் ஹக்கீமும் இன்று கலந்துகொண்டார். 

கூட்டத்தில் சிலர் இந்த பிரச்சினையை கிளப்பியபோதும் தான் எதுவும் பேசவில்லை என அவர் கூறினார். அதுபற்றி நாம் மிக ஆழமாக சிந்திக்க வேண்டம் என கூறினார். 

இதேசமயம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரான எம்.ரி.ஹஸன் அலியை கல்முனையில் உள்ள அவரது வீட்டில் சந்திப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு தூதுக்குழுவை ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது. 

11 ஆசனங்களைப் பெற்றுள்ள இந்த கட்சி முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தது. 

இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிழக்கிலுள்ள மூன்று பெரிய சமுதாயங்களின் பிரதிநிதிகளுக்கும் சம பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைச்சர் சபையை நியமிக்க தயாராக இருப்பதாக கூறினார். 

நாம் ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துப்போக தயாராகவுள்ளோம். அமைச்சர்களை நியமிக்கும் போது சிங்களம் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடங்கொடுக்க வேண்டும் என அவர் கூறினார். 

SLMCக்கு முதலமைச்சர் பதவியும் மத்தியில் பிரதான அமைச்சுப் பதவிகளும் வழங்க மகிந்த தயாராகி வருகிறார்?

Posted in

SLMCக்கு முதலமைச்சர் பதவியும் மத்தியில் மேலும் பிரதான அமைச்சுப் பதவிகளும் வழங்க மகிந்த தயாராகிவருகிறார்?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை நிறுவுவதற்குத் தீர்மானித்துள்ள அரசு, இதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல், எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது முக்கியமான பொறுப்புகளை முஸ்லிம் காங்கிரஸிடம் வழங்குவதற்கும் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாணசபையில் விட்டுக்கொடுப்புடன் கூட்டாட்சியாக மு.காவுடன் இணைந்து செயற்படத் தயாரென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்த ஒரு சூழலில் அரசின் இந்த யோசனை வெளியாகியுள்ளது.
அரசின் இந்தத் தீர்மானம் நேற்றிரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, கிழக்கு ஆட்சியை எவ்வாறு அமைப்பது, மாகாண அமைச்சுகளில் எவரை நியமிப்பது என்பன உட்பட்ட பல விடயங்களை மு.காவுடன் பேச உயர்மட்ட அமைச்சர் குழுவொன்று தயாராகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முதலமைச்சர் பதவி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள்ளேதான் வழங்கப்படவேண்டும் என்ற கொள்கை கட்சியில் இருந்தபோதும் கிழக்கு மாகாணசபை விடயத்தில் அதில் மாற்றங்களைச் செய்ய அரசுத் தலைமை உத்தேசித்திருப்பதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது விடயத்தில் மு.கா. தலைமைத்துவம் கட்சி உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தி முடிவுகளை எடுக்கும்வரை காத்திருப்பதாகவும் அந்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Courtesy:GTN

மாகாண எதிர்க்கட்சியாக இருப்பதற்கும் ஐ.ம.சு.கூ. தயார்: ஹிஸ்புல்லாஹ்

Posted in

எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை அற்ற நிலையில் முடிவுற்ற தேர்தலைத் தொடர்ந்து கிழக்கு மாகாணசபை தொடர்பில் நேற்று (10) காலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து இரவு அது தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.
நேற்றைய கூட்டத்தில் முழுதாக ஆட்சி அமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தே பேசப்பட்டதாகவும், போனஸ் ஆசனங்கள் குறித்தோ ஆட்சி அமைக்கும் பட்சத்தில் யார் முதல்வர் என்பது குறித்தோ பேசப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வெளிநாடு சென்றிருப்பதால் அவர் வருகை தந்தவுடன் தேசியப்பட்டியல் தொடர்பான முடிவுகள் எட்டப்படும் என்று ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைப்பதன் சாத்தியக்கூறுகளைப் பற்றி வினவியபோது அது தொடர்பில் முடிவேதும் இல்லை எனினும் சாதகாமான சமிக்ஞையாக நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற தெரிவுக் குழுக் கூட்டம் ஒன்றில் மு. கா. தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹகீம், தாங்கள் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும், தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது பற்றி ஜனாதிபதிக்கு அறிவித்துவிட்டே போட்டியிட்டதாகவும் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டினார்.
முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்ட போது. அதை அரசு அவதானித்து வருவதாகவும், அவ்வாறான நிலை ஏற்படின் எதிர்க்கட்சியாக இருந்து செயற்படவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

முடிவு செய்யும் முக்கிய இடத்தில் முஸ்லிம் காங்கிரஸ்

Posted in

எதிர்பார்த்தபடியே கிழக்கு பிராந்திய மாகாணசபை தேர்தல் எந்த அணிக்கும் அறுதி பெரும்பான்மை இல்லாமல் ‘தொங்கு சபை’ எந்தவிதத்தில் முடிந்துள்ளது. என்றாலும், மேலும் எதிர்பார்த்தபடியே அந்த பிராந்தியத்தில் அடுத்து யார் அரசு அமைக்க வேண்டும், யார் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற முடிவுகளை எடுக்கும் முக்கிய பொறுப்பில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று உள்ளது.
நடந்து முடிந்துள்ள மூன்று மாகாண சபை தேர்தல்களில், இரண்டில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தனி பெரும்பான்மையை பெற்றுள்ளது. இதுவும் கூட எதிர்பார்த்த ஒன்றே. அதே சமயம் கிழக்கு மாகாணத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக வாக்குகளும் அதன் காரணமாக அதிக இடங்களையும் பெறும் என்ற எதிர்பார்க்க முடியாத எதிர்பார்ப்புகளும் இருக்கத் தான் செய்தன. தேர்தல் முடிவுகள் அந்த எதிர்பார்ப்புகளை முறியடித்துள்ளன.
அந்த விதத்தில், கிழக்கு மாகாணத்திலும் மத்தியில் ஆளும் கூட்டணியே அதிக இடங்களை பெற்றுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களை வைத்து நோக்கும் போது, தமிழ் கூட்டமைப்பு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிபை விட ஒரே ஒரு இடம் தான் குறைவு. மொத்தமுள்ள முப்பதியேழு இடங்களில் கூட்டமைப்பிற்கு பதினொன்றும், ஆளும் கூட்டணிக்கு பன்னிரெண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களும் கிடைத்துள்ளன. ஆனால் மாகாணத்தில் அதிக வாக்குகளை பெற்ற கட்சி என்ற விதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியே முன்னிற்கிறது. அதன் காரணமாக இரண்டு ‘போனஸ்’ இடங்கள் அந்த கூட்டணிக்கு கிடைத்துள்ளன. ஆக, கூட்டணியின் மொத்த இடங்கள் பதினான்காக உயர்ந்துள்ளது.
ஆனால், மாகாணத்தில் ஆட்சி அமைக்க இத்தனை இடங்கள் போதாது. மொத்தமுள்ள முப்பதியேழு இடங்களில் பாதிக்கும் அதிகமான பத்தொன்பது இடங்கள் இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியம். அதே சமயம், மாகாண சபை சபாநாயகர் பதவியும் தன் வசமே இருக்க வேண்டும் என்று எந்தவொரு ஆளும் கட்சியும் கருதுவது இயற்கை. சபாநாயகர் பதவியும் வேண்டும், அதே சமயம் சபை வாக்களிப்புகளில் ஒவ்வொரு முறையும் சபாநாயகரின் ‘விருப்ப வாக்கை’ நம்பி மட்டுமே அரசு செயல்படக் கூடாது என்று கட்சி தலைமைகள் எண்ணுவதும் இயற்கை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், கிழக்கு மாகாணத்தில் நிலையான ஆட்சி அமைக்க இருபது இடங்கள் தேவைப்படுகின்றன.
இந்த கணக்கை வைத்துப் பார்க்கும் போது, அரசு மற்றும் கூட்டமைப்பு தரப்பினர் இருவருக்குமே போதிய அளவில் உறுப்பினர்கள் இல்லை என்பதே உண்மை. இந்த பின்னணியில், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி – கிழக்கு மாகாணத்தில் பெற்றுள்ள நான்கு இடங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. அதுபோன்றே அரசில் பங்கு வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி ஒரு இடத்தை பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஐக்கிய தேசிய கட்சியானது தமிழ் தேசிய கூட்டமைப்பையும் – விமல் வீரவன்சவின் கட்சியானது அரசு கூட்டணியையுமே ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். அவ்வாறானால், இரு தரப்பினருமே தலா பதினைந்து இடங்களை பெற்றவர்களாவார்கள்.
இந்த பின்னணியில், இரு தரப்பினருக்குமே மேலும் நான்கு இடங்களையாவது பெற்றால் மட்டுமே கிழக்கு மாகாணத்தில் அரசு அமைக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் தான் முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலுக்கு பின்னாலான அரசியலில் முக்கிய கட்சியாக இருக்கிறது. மேலே கூறியது போல் இரண்டு அணிகள் உருவாகும் பட்சத்தில், தலா பதினைந்து இடங்கள் பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள ஏழு இடங்கள் முஸ்லிம் காங்கிரஸ் வசம் உள்ளது. சாதாரண நிலையில் அந்த கட்சியின் ஆதரவுள்ள அணியே கிழக்கு மாகாணத்தில் அரசு அமைக்க முடியும் என்ற சூழ்நிலையும் உருவாகி உள்ளது.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அரசு சார்பில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம், முஸ்லிம் காங்கிரஸுடன் அரசு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரத்தின் போதே, முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்ந்து அரசு அமைக்க கூட்டமைப்பு முயலும் என்று சம்பந்தன் வெளிப்படையாகவே பேசிவந்துள்ளார். தேர்தலுக்கு பின்னர், சுட்டமைப்பு ஆட்சியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் அது கூட்டணி அரசாகவே இருக்கும் என்பதில் கூட்டமைப்பு தெளிவாக இருந்தது. அந்த அரசுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தாலும், முஸ்லிம் காங்கிரஸ் இடம் பெற்றால் மட்டுமே மாகாண சபையில் கூட்டமைப்பிற்கு ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் சம்பந்தன் தலைமை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த பின்னணியில், மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸை எவ்வாறு எதிர் அணிக்கு இழுக்க வேண்டும் என்பது குறித்த சர்ச்சைகள் தமிழ் கூட்டமைப்பு தலைமைக்குள் எழுந்தமை குறித்து பத்திரிகை செய்திகள் முன்பே கூறி வந்துள்ளன. அதில் ஒன்று தான், கூட்டணி ஆட்சியில் முதல்வர் பதவியை கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் தலா இரண்டரை ஆண்டுகள் தங்களதாக்கிக் கொள்வது. இது குறித்து இரு கட்சிகளும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தேர்தலுக்கு முன்பு செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியில் தான், தேர்தல் முடிவுகள் வெளிவந்த கையுடன் சம்பந்தன், இத்தகைய கூட்டணி கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், அதற்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்ப்பு இல்லை என்றும் அறிவித்துள்ளார். இத்தகைய கருத்து அமைந்த கடிதத்தையும் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளர் என்ற முறையில் மாவை சேனாதிராஜா கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கரமவிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன.
கூட்டமைப்பின் இந்த அறிவிப்பு, இரண்டரை ஆண்டு விகிதாசாரத்தில் விடுக்கப்பட்ட அழைப்பா அல்லது, அடுத்த ஐந்து ஆண்டுகளுமே கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தொடர்ந்து பதவி வகிப்பதற்கு கூட்டமைப்பு அளிக்கும் உத்தரவாதமா என்பது தெரியவில்லை. முக்கியமாக, இவ்வாறு பத்திரிகை செய்தி மூலம் எதிர்கால கூட்டணி கட்சிகள் என்று கூட்டமைப்பு கருதும் கட்சிகளுக்கு விடுத்துள்ள அழைப்பு அந்தந்த கட்சி தலைமைகளுடன் கலந்தாலோசித்தே விடப்பட்டதா என்றும் தெரியவில்லை.
அவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைமைகளுடன் கலந்தாலோசிக்காமல் கூட்டமைப்பு ஒரு தலைப்பட்சமாக முடிவு தெரிவித்து இருந்தால், அத்தகைய அழைப்பு, அந்தந்த கட்சி தலைமைகளை ஒருவித அழுத்தத்திற்கு உள்ளாக்குவதற்காக கூட்டமைப்பு விரித்த அரசியல் வலை என்ற எண்ணம் உருவாகும். அதுவே, பின்னர் கூட்டமைப்பு பங்கு பெறும் அரசு அமைவதற்கு தடைக்கல்லாக அமையும். அல்லது, அத்தகைய அரசு அமையும் பட்சத்தில், பிற்காலத்தில் கூட்டமைப்பு குறித்த நம்பகத் தன்மையின்மையை அந்த கூட்டணி கட்சிகளுக்கிடையே உருவாக்கும். இது கூட்டமைப்பின் எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல.
அதை விட முக்கியமாக, இப்போதும், எப்போதும் கூட்டமைப்பின் இத்தகைய ‘வெளிப்படையான’ அரசியல் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளேயே அனாவசிய சலசலப்புகளை ஏற்படுத்தி, உட்கட்சி பூசல்களுக்கு வழிவகுக்கும். அதற்குண்டான பழியும் பாவமும் முதல் முறையாக மத்தியில் ஆளும் இரண்டு முக்கிய சிங்களவர் கட்சிகளுக்கு அப்பால் சென்று, கூட்டமைப்பின் தலையில் விழும். அதற்கு கூட்டமைப்பு தலைமை தயாரா? என்று ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். அதுபோன்றே, தங்களது தற்போதைய அரசியல் முயற்சி வெற்றிபெறவில்லை என்றால், அது குறித்து தமிழ் மக்களிடையே எத்தகைய எண்ணங்கள் உருவாகும் என்பதையும் கூட்டமைப்பு கருத்தில்கொள்ள வேண்டும்.
அதே சமயம், இத்தகைய கூட்டணி ஒன்று உருவாகி செயல்படும் பட்சத்தில், அதன் பிரதிபலிப்பு தேசிய அளவில் தோன்றவும் செய்யும். அவ்வாறானால், மத்தியில் புதிய கூட்டணி ஒன்று உருவாவதற்கு அந்த கூட்டணி அச்சாரம் போடும். அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசிற்குள்ளும் நாடாளுமன்றத்திலும் பிரதிபலிக்க தொடங்கும். அதுவே, அடுத்த தேர்தல் சமயத்தில் ஆட்சிமாற்றத்திற்கு அடிகோலும் என்று எதிர்பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், வடமத்தி மற்றும் சப்ரகமுவ ஆகிய இரு மாகாண சபை தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது அத்தகைய எண்ணம் உருவாக உடனடி காரணம் இல்லை. ஆனால் அதுவே உந்துவிசையாக உருவாகாது என்று கூறிவிடவும் முடியாது.
ஆனால், கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் நடவடிக்கை அறிவிக்கும் செய்தி என்ன? ஒன்று, எப்போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை எந்தவித கோரிக்கைகளும் இல்லாமல் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்கிறதோ, கிழக்கு – வடக்கு இணைப்பு போன்ற மிகவும் சிக்கலான பிரச்சினைகளிலும் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகளையும் முஸ்லிம் காங்கிரஸின் முடிவுகளையும் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டதாகவே கருத வேண்டும். அவ்வாறாகும் பட்சத்தில், நாளை கூட்டமைப்பின் விருப்பத்திற்கேற்ப ஓர் அரசு கிழக்கு மாகாணத்தில் ஏற்படவில்லை என்றாலும், இரு மாகாண இணைப்பு பிரச்சினையை அந்த கட்சி மீண்டும் முன்னெடுத்து அரசியல் செய்வதற்கான தார்மீக உரிமையை இப்போதே இழந்து விட்டது.
அதுபோன்றே, கூட்டமைப்பின் விருப்பத்திற்கேற்ப, கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமையும் பட்சத்தில் வடக்கு மாகாணத்தில் இதுபோன்ற ஓர் அரசியல் மற்றும் தேர்தல் அமைப்பிற்கு அந்த கட்சி தயாராக வேண்டும். எப்போது, வடக்கில் மகாணசபை தேர்தல் நடக்கிறதோ, அப்போது, தேர்தலில் கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கு என்பன போன்ற கோரிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸும், ஏன் ஐக்கிய தேசிய கட்சியும் கூட முன் வைக்கும் என்று எதிர்பார்க்கலாம். வடக்கு மாகாணத்தில் தனது அரசியல் வலிமை மற்றும் உட்கட்சி நிர்பந்தங்கள் ஆகிய காரணங்களுக்காக, கூட்டமைப்பு அத்தகைய ஒப்பந்தத்திற்கு தயாராக இல்லாத பட்சத்தில், கிழக்கு மாகாண அரசு கவிழும் நிலைமை உருவாகலாம். அதற்கும் கூட்டமைப்பு தயாராக இருக்க வேண்டும்.
கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு மேலும் ஒரு தார்மீக சங்கடத்தை கூட்டமைப்பிற்கு ஏற்படுத்தியுள்ளது. கடந்த தசாப்தங்களில் விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆளுமைக்கு பணிந்து கூட்டமைப்பு அரசியல் செய்து வந்ததன் காரணமாக, அரசு இயந்திரங்களுடன் இணைந்து செயல்படும் விதத்தையும் வித்தையையும் அந்த கட்சி அறிந்திருக்கவில்லை. அந்த விதத்தில், ஏதோ ஒரு விதத்தில் கிழக்கு மாகாண அரசில் கூட்டமைப்பு இடம் பெறுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதுவும் முஸ்லிம் (காங்கிரஸ்) தலைமையிலான அரசில் கூட்டமைப்பு பங்கு பெறுமானால், அதுவே, கூட்டமைப்பின் மகாணசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் – மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் பங்கு வகித்து வரும் முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர்களின் ஆட்சி அனுபவத்தில் இருந்து நல்ல படிப்பினை பெற வழிவகுக்கும்.
அதே சமயம், எப்போது வடக்கு – கிழக்கு இணைப்பு போன்ற ‘அடிப்படை விடயங்களில்’ கூட்டமைப்பு விட்டுக் கொடுக்க தயாராகி விட்டதோ, அப்போதே அந்த கட்சி பிற அரசியல் கட்சிகளை போலவே சிந்தித்து செயலாற்ற தொடங்குவதற்கான முயற்சியில் இறங்கி விட்டது என்றே கருத வேண்டும். இதுவும் ஒருவிதத்தில் வரவேற்கப்பட வேண்டிய விடயமே. அதே சமயம், எப்போது கொள்கைசாரா அரசியலுக்கு கூட்டமைப்பு தன்னை தயார்படுத்திக் கொண்டு விட்டதோ, அப்போதே அதனால் ஏற்படும் அதிர்வுகளுக்கும் அதிர்ச்சிகளுக்கும் கூட அதன் தலைமை கட்சியை தயார் செய்துகொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு, கூட்டமைப்பை விட நேரடி அரசியலில் அனுவமும் அது பான்றே எதிர்பார்ப்புகளும் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் வேறுவிதமாக சிந்திக்கலாம். மத்தியில் தற்போது ஆட்சி செய்யும் கூட்டணியும் தனது பங்கிற்கு முதலமைச்சர் பதவி உட்பட்ட பிற அரசியல் சலுகைகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மற்றும் அந்த சமுதாயத்தினருக்கு அள்ளி அளிக்கலாம். இந்தவிதத்தில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியுடன் முஸ்லிம் காங்கிரஸ் தொடரும் பட்சத்தில், கிழக்கு மாகாண ஆட்சியில் பங்கு என்பதுடன் மத்தியில் அமைச்சரவை பதவிகளையும் அந்த கட்சி தக்க வைத்துக்கொள்ள முடியும்.
இவ்வாறாக முஸ்லிம் காங்கிரஸ் முடிவு எடுத்தால், அதற்காக கூட்டமைப்பு – மத்திய அரசு தலைமை உள்ளிட்ட யாரையும் குறை கூறி அரசியலாக்கக் கூடாது. அதில் அனாவசியமாக இனப் பிரச்சினையின் அலகுகளை கண்டு, கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு தமிழ் மக்களின் எண்ணவோட்டத்தை தவறான பாதையில் வழி நடத்த முயலக் கூடாது. நடிகர் கவுண்டமணியின் வார்த்தையில் கூற வேண்டும் என்றால், ‘அரசியலில் இதுவெல்லாம் சகஜம்’ என்ற விதத்தில் அதனை ஏற்றுக்கொண்டு எதிர்கால தேர்தல் அரசியலுக்கு தன்னை முழுவதுமாக தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதுவே, கூட்டமைப்பும் தமிழ் சமுதாயமும் தங்களை இனப் போர் அற்ற எதிர்கால அரசியலுக்கு தங்களை தயார் செய்துகொள்ள உதவும். அதுவே தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளுக்கும் வழிவகை செய்யும். மாறாக, ‘எதிர்மறை அரசியல்’, தமிழ் சமுதாயத்திற்கு எதிர்மறை விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும். இதுவே கடந்த காலம் அறிவித்துணர்த்தும் பால பாடம். அதுவே தமிழ் சமுதாயத்திற்கு தற்போது முதியோர் கல்வியும் கூட என்று மாறிவிட்டதற்கு தமிழ் அரசியல் மற்றும் போராளிக் குழுக்களின் தலைமைகள் பொறுப்பேற்க வேண்டும். அத்தகைய நிலைமை மாறுவதற்கு தற்போதாவது ஆவன செய்ய வேண்டும்!
Courtesy: Tamilmirror

கிழக்கின் அடுத்த முதலமைச்சர் நசீர் ஹாபிஸ்??

Posted in

கிழக்கு மாகாண முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவர் நசீர் ஹாபிஸ் நியமிக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.
ஆரசாங்கத்திடம் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது நசீர் ஹாபிஸை முதலமைச்சராக நிமிக்கு மாறு முஸ்லிம் காங்கிரஸ் கோரலாமென எதிர் பார்க்கப்படுகின்றது.

முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் தயார்: சம்பந்தன்

Posted in

‘ஊழலற்ற, நேர்மையாக செயற்படக்கூடிய முதலமைச்சர் ஒருவர்தான் எமக்குத்தேவை. அவர் முஸ்லிமா, தமிழரா என்பது முக்கியமல்ல. அத்துடன் தேவைப்பட்டால் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்’ என்று நேற்று நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்தும் மாகாண சபை நிர்வாகத்தை அமைப்பது குறித்தும் பத்திரிகையாளர்களுக்கு இன்று மாலை கருத்துதெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்…
‘மக்களால் எமக்குத்தரப்பட்டுள்ள ஆணையை நிறைவேற்றவேண்டியது எமது கடமை. இந்த தேர்தல் வெற்றியை அரசாங்கம் களவாட நாம் அனுமதிக்கமாட்டோம். அரசாங்கத்தரப்பு இப்போது பெற்றுள்ள சாதாரண வெற்றியைக்கொண்டு அவர்கள் ஆட்சியமைக்க அனுமதிக்க முடியாது. மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மாகாண ஆட்சியை அமைக்க அழைத்தால் அதனை நாம் சட்டரீதியாக தடுப்போம்.
கிழக்கு மாகாண தேர்தலை நடத்திய முறை மூலம் எமக்கு கிடைக்கவேண்டிய வெற்றியை அரசாங்கம் சூறையாடியுள்ளது. இந்த தேர்தலில் அரசாங்கத்தை எதிர்த்த கட்சிகள் மூன்றும் வெற்றிபெற்றுள்ளது. மூன்று கட்சிகளினதும் மொத்த ஆசன எண்ணிக்கை 22. ஆனால் அரசாங்கம் மற்றும் அதனோடு இணைந்து செயற்படக்கூடிய இன்னுமொரு கட்சி ஆகிய இரண்டினதும் ஆசன எண்ணிக்கை 15. எனவே ஐ.ம.சு.மு. மாகாண ஆட்சியை அமைப்பதை நாம் அனுமதிக்கப்போவதில்லை.
‘இன்று காலை கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் எமது கட்சிப் பொதுச் செயலாளர் – மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன 22 ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ளன. எனவே கிழக்கு மாகாண ஆட்சியை அமைக்கத் தேவையான பெரும்பான்மைப் பலம் எமக்கு உள்ளது. ஆகவே அத்தகைய ஆட்சியமைப்பதற்கும் அதற்கேதுவாக மாகாண முதலமைச்சரை நியமிக்கவும் எமக்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்கவும் என்று நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்று மேலும் குறிப்பிட்டார்.