Follow me on Twitter RSS FEED

வாழைச்சேனை முஸ்லிம் ஆட்டோ சாரதிகள் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பது யார்?

Posted in

வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் இவ்வளவு காலமும் தொழில் செய்து வந்த ஆட்டோ சாரதிகளை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகள் கடந்த காலங்களில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருந்தது நாமறிந்ததே!
அதன் ஒரு அங்கமாக இன்று பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தலைமையில் ஏற்கனவே எமது சகோதரர்களின் முயற்சியினால் அமைக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட பஸ் தரிப்பு நிலையத்தை உடைத்தெறிந்துவிட்டு தமிழ் சகோதரர்களின் ஆட்டோ தரிப்பிடத்திற்கு முன்னால் பஸ் தரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன் விளைவாக இன்று இன முறுகள் ஒன்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இருந்த போதும் SSP யின் தலையீட்டினால் சற்று அமைதியான சூழல் தற்போது நிலவுகின்றது.


இருந்தும் தமிழ் சகோதரர்களின் தரப்பில் பலமான அரசியல் பலம் இருப்பதை கண்கூடாக கானகிடைத்தது மட்டுமல்லாமல் குறித்த பிரதேசத்தைவிட்டும் எமது சகோதரர்களை அப்புறப்படுத்தி அவ்விடத்தில் தமிழ் சகோதரர்கள் மட்டும் தொழில்புரிவதற்கு தான் சம்மதிப்பதாக அமைச்சர் அமீர் அலி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கையெழுத்திட்டு உறுதியழித்ததாக யோகேஸ்வரன் எம்.பி. SSP முன்னிலையில் விளக்கமளித்தார்!

ஏன் நாம் இன்னும் அனாதையாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் எமது பிரச்சினையை பார்ப்பதற்கு ஏன் ஒரு அரசியல்வாதிகளும் முன் வருகிறார்கள் இல்லை என்ற ஏக்கம் அங்கு குழுமியிருந்தவர்களின் ஒன்றுபட்ட ஓலமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது!

செய்தியாளர் - நாசர் இஸ்மாயில் 

குறித்த நிகழ்வின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/imnazar34/videos/1516683788384817/ 

0 comments: