Follow me on Twitter RSS FEED

சந்திவெளி, சித்தாண்டிக்கு செல்லும் முஸ்லிம் வியாபாரிகள் அவதானம்!!!

Posted in
கிரான் சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கையை மேற்கொள்ள முடியாதவாறு வெளியேற்றப்பட்டதைப் போன்று நாளை செவ்வாய்க் கிழமை சந்திவெளி வாராந்தச் சந்தையிலும் எதிர்வரும் வியாழக்கிழமை சித்தாண்டி வாராந்த சந்தையிலும் முஸ்லிம் வியாபாரிகளை வெளியேற்ற சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.


சாதாரண தமிழ் மக்களுக்கு இந்த முஸ்லிம் விரோதப் போக்கில் எவ்வித சம்மந்தமில்லை என்பதோடு இதற்குப் பின்னணியாக இனங்களுக்கிடையில் குழப்பங்களை விளைவித்து அதன் மூலம் அரசியலில் பிரபல்யமடையத் துடிக்கும் ஒரு சில இனத் துவேசிகள் வேலைத் திட்டமே இவையாகும்.

ஆகவே மேற்படி பிரதேசங்களுக்கு வியாபார நடவடிக்கைகளுக்குச் செல்லும் முஸ்லிம் வியாபாரிகள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் மாத்திரமே உங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்படி இடங்களில் மேற்கொள்ளவும். இனமுறுகலொன்று ஏற்பட வாய்ப்பிருக்கும் தருணத்தில் அவ்விடங்களுக்குச் செல்வதை பெருமு்பாலும் தவிர்த்துக் கொள்வது வீணான பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காக்கும். 

0 comments: