Follow me on Twitter RSS FEED

இனமுரண்பாடும் உங்கள் எதிர்பார்ப்பும்... (Thilipkumaar Ganeshan's FB)

Posted in
எங்கள் முகநூல் நண்பன்  Thilipkumaar Ganeshan யின் முக நூல் ஆக்கம்.

இனமுரண்பாடும் உங்கள் எதிர்பார்ப்பும்...

சந்தைக்கு சோனி வரக்கூடாது என்று இந்தப்பக்கம் இருந்து சொல்வீர்கள், அந்தப்பக்கம் தமிழன் எங்கள்
ஊருக்கு தொழிலுக்கு வரக்கூடாது என்று சொல்வார்கள்.

ஒரு நாள் வன்முறையாக வெடிக்கும்
தொடர்ந்து பத்து நாட்கள் கலவரம் நடக்கும்12ம் நாள் பேச்சுவார்த்தை மறு நாள் பழையபடி நல்லுறவு ஒற்றுமை எல்லாம் ஏற்படுத்தப்படும். சுமுகமாக எல்லாம் வழமைக்கு திரும்பும்.


இடையில் நீங்கள் சண்டையிட்ட அந்த 10நாட்களில்
மீன் விற்கவும், ஓலைப்பெட்டி,பாய் விற்கவும் வரும் ஏழை முஸ்லீமும்
மேசன்,ஓடாவி என்று சோற்றுகாக கூலி வேலை செய்து பிழைக்கும் தமிழரும் செத்துப்போயிருப்பார்கள்.

விதவைப்பெண்களும் அனாதைக்குழந்தைகளும் உருவாக்கப்பட்டிருப்பார்கள்.கலவரம் ஒன்றை உருவாக்க ஓடித்திரியும்நீங்கள் அவர்களுக்கு சோறு கொடுப்பீர்களா?

அரைவயிறும் கால்வயிறுமாய்
பட்டினியோடும் வறுமையோடும் போராடி
பள்ளிக்கு சென்று படிக்கவும் வசதியில்லாமல் அடுத்தவர் கைகளை எதிர்பார்த்து அந்தக் குழந்தைகள் படாத பாடு படும்.

வருமானத்திற்கு வழியின்றி கணவனை இழந்து கிடைக்கின்ற தொழிலை செய்து வாழும் பெண் மீது பாலியல் சுரண்டலுக்காய்
உங்களில் ஒரு கூட்டம் திரியும்,
பின்பொருநாள்
அவள் வேசை என்று சொல்லிக்கொண்டு இலகுவாய் கடந்து செல்வீர்கள்.

உங்களை வைத்து அரசியல் செய்பவன் இனவாதத்தை காட்டி வென்றுவிட்டு தனது வேலையைப் பார்க்க போய் விடுவான்.
வன்முறையில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள்
வருடக்கணக்கில் நீதிமன்றும் போலீசுமாக இழுபட்டு திரிவார்கள்.

இவற்றுக்காவே இத்தனை பிரயத்தனம் செய்கிறீர்கள்.
ஏன் என்றால் இழப்புக்கள் உங்கள் குடும்பத்திற்கு இல்லை தானே..

0 comments: