Follow me on Twitter RSS FEED

திருகோணமலை காணி பிரச்சினைகள், தனியான கல்வி வலயம் தொடர்பான ஆவணங்கள் அன்வரினால் கிழக்கு ஆளுனரிடம் கையளிப்பு

Posted in
-எம்.ரீ. ஹைதர் அலி-

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இராஜாங்க சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஆர்.எம்.அன்வர் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை இன்று (17) ஆளுனர் செயலகத்தில் சந்தித்தார். 

இச்சந்திப்பின்போது, திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான தெளிவான விளக்கத்தை கூறியதுடன், புல்மோட்டை காணி மற்றும் திருகோணமலை மாவட்ட காணிப் பிரச்சினைகள் தொடர்பாக உள்ளடங்கிய ஆவணங்கள் மற்றும் குச்சவெளி பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பான கடிதமொன்றினையும் ஆளுனரிடம் அன்வர் கையளித்தார்.

மேலும் ஆளுனர் எதிர்வரும் ஒருசில தினங்களில் முப்படைகளின் தளபதி கிழக்கு மாகாணத்திலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்கள், காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள் மூன்று மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரும் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை தான் அனுப்பி வைப்பதாகவும் கிழக்கிலுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பாக தான் கூடிய கவனம் செலுத்தி தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதி அளுனர் வாக்குறுதி அளித்தார்.

தான் இன, மத, மொழி பேதத்திற்கு அப்பால் அணைத்து இன மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க தாம் உறுதி பூண்டுள்ளதாக ஆளுனர் கூறியதாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் மேலும் தெரிவித்தார்.

0 comments: