Follow me on Twitter RSS FEED

எம்.எம்.ஹனீபா (G.S) அன்பளிப்பில் UNITED AIDஇனால் கொப்பிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Posted in

UNITED AID அமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒரு அங்கமாக வருடாவருடம் வறிய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்களை பல்வேறு பகுதிகளிலும் வழங்கி வருகின்றது

அதன் ஒரு கட்டமாக மாஞ்சேலை-பதுரியா நகர் பகுதிக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கான இலவச விநியோகம் இன்று இடம்பெற்றது. இதற்காக பிரபல சமூக சேவையாளரும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினருமான எம்.எம்.ஹனீபா (ஜீ.எஸ்) அவர்கள் அப்பியாசக் கொப்பிகளை அன்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

இவை UNITED AID அமைப்பின் பணிப்பாளர் .பி.எம். றிஸ்வின் அவர்களினால் நேரடியாக குறித்த பகுதி மாணவர்களுக்காக இன்று 04.01.2019ம் திகதி மாலை பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது குறுகிய வேண்டுகோளை ஏற்று அப்பியாசக் கொப்பிகளைப் பெற்றுத்தந்துதவிய எம்.எம்.ஹனீபா (ஜீ.எஸ்) அவர்களுக்கு அமைப்பு சார்பாகவும், மாணவர்கள் சார்பாகவும் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.




























0 comments: