Follow me on Twitter RSS FEED

கல்குடா ஜனாஸா நலன் சேவை அமைப்பின் சிறந்த திட்டமிடலுடனான ஆரம்பம்

Posted in
கல்குடா ஜனாஸா நலன் சேவை அமைப்பின் அலுவலக திறப்புவிழா ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் திறந்து வைக்கும் நிகழ்வு 2019.02.01ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. ஜமாஅத்தார்கள், உலமாக்கள், மற்றும் புத்திஜீவிகள் பங்கேற்ற இந்நிகழ்வில் பள்ளிவாயல் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் இடைக்காலத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட உதவித் தொழில் ஆணையாளருமான ஜனாப் அபூபக்கர் தாஹிர் அவர்கள் அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். 

இந்நிகழ்வு ஜனாஸா நலன் சேவை அமைப்பின் தலைவரும், ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயல் பேஷ் இமாம் ஜனாப் முஸ்தபா (ஸிராஜி) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

பள்ளிவாயல் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் இடைக்காலத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட உதவித் தொழில் ஆணையாளருமான ஜனாப் அபூபக்கர் தாஹிர் அவர்கள் உரையாற்றும்போது ”ஒரு சாதாரண ஜனாஸாவாக அதாவது இயற்கையான மரணமாக இருக்கும் போது அவ்வளவு சிக்கல்கள், பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. அதுவே விபத்தாகவோ அல்லது ஆற்றிலோ குளத்திலோ கடலிலோ ஒருவர் மரணித்து விட்டால் அந்த ஜனாஸாவை தேடி எடுக்க ஏனையவர்களின் உதவியை நாம் நாடவேண்டிய தேவை ஏற்பட்டு விடுகின்றது. அந்தவகையில் இந்த அமைப்பானது அதற்கான உபகரணங்களை தன்னகத்தே கொண்டு அதற்கான சிறப்பான சேவையை முன்னெடுக்க ஆலோசித்து இருப்பது ஒருபடி மேல் சென்று தனது சேவையை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பது வரவேற்க தக்க விடயமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார். 

அமைப்பின் நோக்கம் மற்றும் சேவைகள் தொடர்பாக நலன் சேவை அமைப்பின் செயலாளரும் ஆசிரியருமான ஜனாப் எம்.எம் உவைஸ் அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டதுடன். ஜம்மியத்துல் உலமா சார்பாக ஓட்டமாவடி பிரதேச செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் அசனார் இல்யாஸ் (கபூரி) அவர்களினால் கருத்துரை முன் வைக்கப்பட்டது. நலன் சேவை அமைப்பின் அலுவலகத்தினை ஓய்வு பெற்ற கல்விப்பனிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எம்.ஏ.காதர் அவர்களினால் பிரமுகர்களின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.


0 comments: