Follow me on Twitter RSS FEED

காத்தான்குடி முஸ்லிம் காங்கிரஸ் கிளையின் முயற்சியால் காத்தான்குடி நகர சபைக்கு இரண்டு கொம்பெக்டர்ரக குப்பை அள்ளும் இயந்திரங்கள் - பொறி. ஷிப்லி பாறூக்

Posted in
-எம்.ரி.எம்.ஹைதர் அலி-
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸிடம் காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளையினர் வேண்டிக்கொண்டதற்கு இணங்க திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்துவதற்கான இயந்திரங்கள் (கொம்பெக்டர்ரக குப்பை அள்ளும் இயந்திரம்) இரண்டு காத்தான்குடி நகர சபைக்கு வழங்கப்படவுள்ளன. 


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படுள்ள வாகனங்களில் காத்தான்குடி நகர சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இரு வாகனங்களும் நகர சபை சாரதிகளால் துறைமுக வாகனம் நிறுத்தும் இடமான மிரிச்சிவலயில் இருந்து இன்று எடுத்துச் செல்லப்பட்டு காலியில் பையளிப்பு இடம்பெறவுள்ள ஹொலிடே ஹாள் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதனை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் காலியில் வைத்து நாளைமறுதினம் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக நகர சபையிடம் கையளிக்கவுள்ளார். 

காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை சார்பாக நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று இவ்விரு இயந்திரங்களையும் ஒதுக்கீடு செய்தமைக்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீசுக்கு காத்தான்குடி மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், இன்னாள் நகர சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார். 

திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்துவதற்கான முதற்கட்ட இயந்திர தொகுதிகள் இலங்கை வந்தடைந்துள்ளன, அவற்றில் 16 இயந்திர தொகுதிகளை கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குவதற்கு இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். 

மேலும் கொரிய மற்றும் இந்திய நாடுகளின் உதவியுடன் இரண்டாம் கட்ட இயந்திர தொகுதிகள் கூடிய விரைவில் இலங்கை வந்தடையவுள்ளன. அவற்றிலும் பல இயந்திர தொகுதிகளை கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளும் இராஜாங்க அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

0 comments: