Follow me on Twitter RSS FEED

SECRO Sri Lanka அமைப்பின் தலைவர் ஹனீபா அவர்களின் சுதந்திர தினச் செய்தி

Posted in
எமது நாட்டில் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையும், தன்னம்பிக்கை இழந்து தங்களது உயிர்களை தாங்களே மாய்த்துக் கொள்ளும் தற்கொலை கலாசாரத்தில் இருந்தும் விடுபட்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என SECRO Sri Lanka அமைப்பின் தலைவர் ஜனாப் அபூபக்கர் முகம்மது ஹனீபா தெரிவித்தார். 

எமது தேசத்தின் 71வது சுதந்திர தினத்தின் வாழ்த்து செய்தியில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இன்று வளர்ந்து வரும் வளர்முக நாடுகளில் மதங்களின் தோற்றமும், வளர்ச்சியும் காணப்படுகின்ற போதும் அது எந்தளவிற்கு மனித உள்ளங்களில் இடம்பிடித்துள்ளது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இன்றைய இளைஞர் சமூகம் ஆன்மீக செழிப்புடன் தங்களது விவகாரங்களை கையாள கற்றுக் கொள்வதன் மூலம் எமது தேசம் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி பயனிக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்றும் அவர் மேலும் அவர் தெரிவித்தார்.

0 comments: