Follow me on Twitter RSS FEED

திருகோணமலையில் 40 மில். ரூபா செலவில் ஆயுர்வேத மருந்து உற்பத்திச்சாலை

Posted in
திருகோணமலை மாவட்ட கப்பல்துறையில் 40 மில்லியன் ரூபா செலவில் ஆயுர்வேத மருந்து உற்பத்தி தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் இந்திராணி தர்மராஜா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை அமைச்சின் நிதியில் இது அமையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழிற்சாலைக் கட்டடங்களும் இயந்திரங்களுமாக பெரியளவான இந்தத் தொழில்சாலை அமைக்கப்பட்ட பின்னர் சுமார் 32 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கமுடியும்.
இங்கிருந்து மருந்துகள் உற்பத்தியாக தொடங்கியதும் மிகக் குறைந்த விலைகளில் மருந்துகளைப் பெறக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருமலை வனபரிபாலன திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட 10 ஏக்கர் நிலத்தில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பில் அண்மையில் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments: