Follow me on Twitter RSS FEED

நாவலடி பகுதியில் விபத்து, ஒருவர் பலி

Posted in
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பகுதியில் இன்று காலை கல் ஏற்றிய லொறியொன்று குடை சாய்ந்ததில் அதன் உதவியாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று காலை பொலன்னறுவையிலிருந்து கற்களை ஏற்றிக்கொண்டு வாழைச்சேனை நோக்கிவந்த லொறி நாவலடி சந்தியில் நிலைதடுமாறு குடைசாய்ந்துள்ளது. இதன்போது அந்த லொறியின் உதவியாளர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சாரதியும் மற்றொருவரும் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments: