Follow me on Twitter RSS FEED
Posted in
கடலில் தத்தளித்த மூன்று; மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் மீட்பு!
வாழைச்சேனையில் இருந்து மீன்பிடிக்கச் சென்று பின்னர் காணாமல் போன மூன்று தமிழ் மீனவர்கள் ஒரு மாதகாலத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து சுமார் 800 கடல்மைல் தொலைவில் மற்றொரு மீன்பிடிப் படகினால் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். சிவராசா ஜீவராசா செல்லப்பா மனோகரன் ஆகிய மூன்று மீனவர்களும் கடந்த ஓகஸ்ட் 18ம் திகதி மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்தனர். இவர்கள் சென்ற படகின் இயந்திரம் பழுதடைந்ததால் படகு காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த மூன்று மீனவர்களும் கடலில் தத்தளிப்பதை அவதானித்த மின்னொளி என்ன மற்றொரு படகு இவர்களை மீட்டுள்ளது.

0 comments: