Follow me on Twitter RSS FEED

உலருணவு கடத்தல் : மட்டு. அரச உத்தியோகத்தர் மூவருக்கு விளக்கமறியல் _

Posted in
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் அரசுக்குச் சொந்தமான உலருணவுப் பொருட்களைக் கடத்தி விற்பனை செய்ய முற்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் மூவரை எதிர்வரும் முதலாந் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டு. நீதிவான் நீதிமன்ற நீதிபதி வீ. இராமகமலன் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் வெல்லாவெளி செயலகப் பிரிவுக்குட்பட்ட 13ஆம் கொலனி, சங்கர்புரம் கிராமங்களைச் சேர்ந்த வறிய மக்களுக்கு வழங்குவதற்கென ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் விநியோகித்த அரிசி, மா போன்றவற்றை இவர்கள் பதுக்கி வைத்திருந்தனர்.

இவற்றை விற்பனை செய்வதற்காக ட்ரக்டரில் எடுத்துச் சென்றபோது வெல்லாவெளி பொலிஸார் இவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதிபதி இத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

கிராம சேவை அதிகாரி, பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர், சமாதான நீதிவான் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களாவர்.

0 comments: