Follow me on Twitter RSS FEED

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் வாகரைப் பொலிஸார் கைது!

Posted in
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவுக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்,அவரின் கீழ் பணியாற்றும் ஏழு பொலிஸார், இரு பொதுமக்கள் ஆகியோரைப் புதையல் தோண்டினர் என்கிற சந்தேகத்தில் அனுராதபுரம் பொலிஸ் நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

வாகரையில் திம்புலாகல பகுதியில் ஸ்ரீபுர என்கிற இடத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் புதையல் தோண்டினர் என்று குற்றஞ்சாட்டியே இக்கைது இடம்பெற்றுள்ளது.
கொழும்புக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்த பத்துப் பேரையும் மன்னம்பிட்டி பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் கைது செய்துள்ளார்கள்.

0 comments: