Follow me on Twitter RSS FEED

மட்டக்களப்பு முஸ்லிம் பிரதேசங்களில் நாளை பூரண கர்த்தால்…

Posted in

முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து வெளியிடப்பட்டுள்ள திரைப்படத்தை கண்டித்து உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி வருவதுடன் இலங்கையின் பல பாகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. அந்தவகையில் நாளை 21.09.2012ந் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களான ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி ஆகிய இடங்களில் பூரண கர்த்தாலுடன் கூடிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது. 
இந்த கர்த்தால் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரதேசத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் கலந்து கொள்ளுமாறு ஒவ்வொரு பள்ளிவாயல்களின் ஒலிபெருக்கிகள் மூலம் அழைப்புவிடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

நாளை குறித்த பிரதேசத்திலுள்ள அரச,  அரச சார்பற்ற நிறுவனங்கள், வங்கிகள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, அமைதியான முறையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 comments: