Follow me on Twitter RSS FEED

ஓட்டமாவடியில் இன்று பூரண கர்த்தால்

Posted in

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கும் அமேரிக்காவிற்கும் எதிராக கர்த்தால் மற்றும் எதிர்ப்பு பேரணிக்கு ஏற்கனவே பள்ளிவாயல்கள் மூலம் கூட்டாக விடுக்கப்பட்ட அழைப்பின் படி ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் இன்று 21.09.2012ந் திகதி பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்கள் அரச, அரச சார்பற்ற அமைப்புக்கள், வங்கிகள் மற்றும் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. கொழும்பு பிரதான வீதி உற்பட ஏனைய வீதிகளும் வெறிச்சோடிக் கிடப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. 

அத்தோடு இன்று ஜும்ஆத் தொழுகையின் பின் பல பள்ளிவாயல்களிலிருந்து புறப்பட்டு வர இருக்கின்ற பேரணியில் கலந்து கொள்ளும் அனைத்து முஸ்லிம்களும் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் ஒன்றுகூடி அமேரிக்க எதிர்ப்பை வெளிக்காட்ட இருக்கின்றனர். 

இவை தொடர்பான அனைத்துச் செய்திகளும் எமது செய்தித் தளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். 

0 comments: