Follow me on Twitter RSS FEED

அமைச்சர் டக்ளஸ் குறித்து நவம்பர் 2ல் தீர்ப்பு

Posted in
அமை‌ச்ச‌ர் ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா தொடர்பான வழ‌க்‌கி‌ன் தீர்ப்பு எதிர்வரும் நவ‌ம்ப‌ர் மாதம் 2ஆ‌ம் திகதி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ில் வழ‌ங்ககப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. செ‌ன்னை‌யி‌ல் 24 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு நட‌ந்த கொலை வழ‌க்‌கி‌‌ல் அமைச்சர் ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா ‌‌மீது கு‌ற்ற‌ச்சா‌ட்டு ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்த வழ‌க்கு செ‌ன்னை ‌எழு‌ம்பூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. 

இ‌ந்த வழ‌க்‌கி‌ல் அமைச்சர் ஆஜராகாததா‌ல் தேட‌ப்படு‌ம் கு‌ற்றவா‌ளியென ‌சென்னை நீ‌திம‌ன்ற‌த்‌தா‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டா‌ர். ச‌மீப‌த்த‌ி‌ல் இந்தியா சென்ற அமைச்சரை கைது செ‌ய்ய‌க் கோ‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழ‌க்கு‌ தாக்கல் செய்யப்பட்டது. இ‌ந்‌நிலை‌யி‌ல், தேட‌ப்படு‌ம் கு‌ற்றவா‌ளி என அ‌றி‌வி‌த்ததை ‌‌நீ‌க்க‌க் கோ‌‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அமைச்சர் ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா மனு‌த் தா‌க்க‌‌ல் செ‌‌ய்தா‌ர். 

இ‌ந்த மனு‌ ‌மீதான ‌விசாரணை இ‌ன்று முடிவடைந்ததைத் தொட‌ர்‌ந்து ‌தீ‌ர்‌ப்பை நவ‌ம்ப‌ர் 2ஆ‌ம் ‌திகதி‌க்கு வழ‌ங்கவுள்ளதாக எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அ‌க்ப‌ல் அ‌லி தெரிவித்துள்ளார் என இந்திய இணையத்தளங்கள் செய்து வெளியிட்டுள்ளன.

0 comments: