Follow me on Twitter RSS FEED

நாளைமுதல் மாணவர்களுக்கு அயடின் சோதனை

Posted in
சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களின் உடலில் காணப்படுகின்ற அயடின் கொள்ளவை பரீட்சிப்பதற்கான வேலைத்திட்டமொன்று நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இதற்கேற்ப நாடளாவிய ரீதியில் கல்வி வலயங்கள் ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களிடத்தில் இந்தத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். 

அத்தோடு, இந்த மாணவர்கள் வீட்டில் பயன்படுத்துகின்ற உப்பு வகை குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்த ஆய்வின் போது மாணவர்களின் அயடின் பயன்பாடு குறைத்த தகவல்கள் திரட்டப்படவுள்ளன. இந்த ஆய்வினை மேற்கொள்வதற்காக 48 பொதுசுகாதார பரிசோதகர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments: