Follow me on Twitter RSS FEED

மாணவர்களை சீர்குலைப்பது எமது திட்டமல்ல

Posted in
நாட்டின் சாதாரண சட்டத்தின் கீழேயே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் உதுல் பிரேமரட்ன கைது செய்யப்பட்டதாக உயர்கல்விப் பிரதி அமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அரச சொத்துக்களுக்கு சேத விளைவித்தமை குற்றச்செயலே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் அவர் கைது செய்யப்பட்டது நியாயமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். 

உதுல் பிரேமரட்ன மீதான விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்படாவிடின் அவருக்கு விடுதலை கிடைக்குமென உயர்கல்விப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவர்களை சீர்குலைப்பது அரசாங்கத்தின் திட்டம் அல்ல எனவும் அவர்களை நல்வழிப்படுத்துவதே அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.

0 comments: