Follow me on Twitter RSS FEED

திஸாநாயக்கவை கைது செய்யக் கோருகிறார் திஸாநாயக்க

Posted in
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கைது செய்யப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களிடத்தில் குழப்பம் ஏற்படுத்தும் விதத்தில் வௌ்ளைக்கொடி விவகாரத்தை வெளியிட்டதாகக் கூறி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார், அதேபோன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் இடையில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் உயர்கல்வி அமைச்சர் செயற்பட்டு வருவதாகவும், அதனால் அவரைக் கைது செய்ய வேண்டும் எனவும் அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார். 

மேலும் பல்கலைக்கழக மாணவர்களைப் பாதுகாப்பதற்கென உள்ள பொலிஸார் அவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும்போது வேடிக்கைப் பார்ப்பது கவலையளிக்கதாகவும், இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் உள்ள பொலிஸ் மா அதிபர் அவருடைய சீருடையை அணியத் தகுதியற்றவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments: