Posted in

இளைஞர் விவகார அமைச்சினது இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் ஏற்பாட்டில் அiமைக்கப்பட்டுள்ள இத்தொழிற் பயிற்சி நிலையத்தினை இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும திறந்து வைத்தார்.
இதை திறந்து வைக்கும் வைபவத்தில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயக மூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகாண அமைச்சர் நவரத்தினராஜா, இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தம்மிக ஹேவ பத்தின உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இத்தொழிற் பயிற்சி நியைத்தில் விஷேட மாக கணியவயில் அளவையில் டிப்ளோமா, கணணிப்பிரயோக உதவியாளர் பயிற்சி, ஆடை உற்பத்தி போன்ற தொழிற் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்தார்.பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியின் பேரில் ஜம்பது மில்லியன் ரூபா செலவில் இப்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.