Follow me on Twitter RSS FEED

உதுல் இன்று நீதிமன்றிற்கு

Posted in
கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் உதுல் பிரேமரட்ன இன்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக நுகேகொடை பொலிஸ் பிரிவின் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். உதுல் பிரேமரட்ன தற்போது நுகேகொடை பொலிஸ் அதிகாரி காரியாலயத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

உயர்கல்வி அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் உதுல் பிரேமரட்ன இன்று கோட்டே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments: