Follow me on Twitter RSS FEED

தாய்லாந்தில் திடீர் சுற்றிவளைப்பு; நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர் கைது

Posted in
தாய்லாந்தில் திடீர் சுற்றிவளைப்பு; நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர் கைதுதாய்லாந்து பொலிஸார் நேற்றுமுன்தினம் மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது நூற்றுக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் அங்கு கைது செய்யப்பட்டனர். 

மலேசிய - தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோங்ளா, ஹட்யை ஆகிய கிராமங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தவர்களே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். 

அந்நாட்டில் சட்டரீதியாக தங்கி இருக்கின்றனர் என்பதை நிரூபிக்கும் வகையில் கைது செய்தபோது அவர்களிடம் உரிய ஆவணங்கள் இருக்கவில்லை என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. 

அவர்கள் கப்பல் ஒன்றின் மூலம் கனடா செல்ல தயார் நிலையில் இருந்தார்கள் என்று தாய்லாந்து பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குகின்றார்கள்.

0 comments: