Follow me on Twitter RSS FEED

இராணுவத்தை விட்டு ஓடியவர் கைக்குண்டுடன் கைது

Posted in
இராணுவத்தை விட்டு ஓடியவர் கைக்குண்டுடன் கைது இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 20 வயது இளைஞன் ஒருவர் உள்நாட்டு தயாரிப்பிலான கைக்குண்டு ஒன்றுடம் பூகொடை ஹிலரியா பாம் மண்டலாவை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பூகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பூகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments: