Follow me on Twitter RSS FEED

கடவுச்சீட்டில் நாளைமுதல் மாற்றம்

Posted in
இலங்கைக் கடவுச்சீட்டில் நாளை முதல் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி A மற்றும் N என்ற தொடர் இலக்கங்கள் கொண்ட கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்துபவர்கள் மீண்டும் புதிய கடவுச்சீட்டைப் பெற வேண்டுமென திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தில் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும். A மற்றும் N தொடர் இலக்கம் கொண்ட கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் இரண்டு புகைப்படங்கள் கடவுச் சீட்டின் பிரதி என்பவற்றுடன் ஒரு பக்கத்தையுடைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கையளித்தால் வேண்டும்.
சாதாரண நடைமுறைப் போன்று சமாதான நீதவானின் சான்று, அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திரம் என்பன இணைக்கப்பட வேண்டிதில்லை எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. முதற் தடவையாக கடவுச் சீட்டு பெறவிரும்பும் ஒருவர், முன்பு போன்று உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்வதுடன் அதற்குரிய சகல ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அத்துடன் சமாதான நீதவான் ஒருவரால் விண்ணப்பம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

0 comments: