Follow me on Twitter RSS FEED

மட்டக்களப்பில் பாடசாலை அதிபரின் இடமாற்றத்தை எதிர்த்து ஆர்பாட்டம்

Posted in
மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய குணரெட்ணம் அவர்களை வேறொரு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதனை எதிர்த்து அப்பாடசாலை அபிவிருத்திச் சங்க நிருவாகத்தினரும் பொது மக்களும் இணைந்து நேற்றுக் காலை பாடசாலையின் முன்பாக ஒரு ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளனர். 

அப்போது குறித்த இடத்திற்கு விஜயம் செய்த ஆரையம்பதி கோட்டக் கல்வி அதிகாரி தா.நித்தியானந்தன் அதிபரின் இடமாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து ஆர்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மேற்குறித்த பாடசாலையில் 442 மாணவர்கள் கல்வி கற்பதுடன் 17 ஆசிரியர்கள் அங்கு கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்னறது. மேலும் இந்த கிராமத்தில் இருக்கின்ற பெரிய பாடசாலையும் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

0 comments: