Follow me on Twitter RSS FEED

இந்திய அரசினால் மட்டக்களப்பு தமிழ் பாடசாலைக்கு பஸ்வண்டி அன்பளிப்பு

Posted in
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலைக்கு இந்திய அரசாங்கத்தனால் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான பஸ் வண்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே.காந்திடம் விடுத்த வேண்டுகோளை அங்கீகரித்தே இந்த பஸ்வண்டி வழங்கப்படடுள்ளது.
சுமார் 2000 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பாடசாலையில் வாகனம் இல்லாமையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்தது குறிப்படத்தக்கது.

0 comments: