Follow me on Twitter RSS FEED

பயணத்தினை தடுக்க சதித்திட்டம்

Posted in
இன்று காலை சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக விசேட பூஜையை மேற்கொள்ள கண்டி தளதாமாளிகைக்கு பயணித்த வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரின் வாகனத்தை சிறுலொறி ஒன்று பின் தொடர்ந்து வந்து மோதியுள்ளதாக மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் கோட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக நுகேகொட பொலிஸ் பிரிவு அதிகாரி தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது அவரது பயணத்தினை தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் எனவும் மோதிய சிறு லொறி அதிகாலை விவாகரையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் மாதுலுவாவே சோபித்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments: