Follow me on Twitter RSS FEED

சரத் பொன்சேகாவுக்காக சிறை செல்லத் தயாரென்கிறார் தேரர்

Posted in
ஒக்டோபர் 04, 2010 சரத் பொன்சேகாவுக்காக வாழ்நாள் பூராவும் சிறையில் இருக்கத் தாம் தயாராகவிருப்பதாக மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய பிக்குகள் முன்னணி நேற்று நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மாதுளுவாவே சோபித தேரர் இதனைத் தெரிவித்தார்.
மக்களின் குரலுக்கு, சமயத் தலைவர்களின் குரலுக்கு கட்சி பேதமின்றிச் செவிமடுக்கவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த காலத்தில் ஆயுட்காலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண் துஷ்பிரயோகத்தர்கள் மற்றும் கொலையாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
இந்த மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த இராணுவ வீரரை விடுதலை செய்வதானால் தாம் உட்பட 100 பிக்குமார்  கடூழியச் சிறைத் தண்டனையைப் பெறத் தயாராக  இருப்பதாக மாதுளுவாவே சோபித தேரர் அங்கு கூறினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரரும் கருத்து வெளியிட்டார்.
எந்தவகையில் பார்த்தாலும் பொன்சேகாவுக்கெதிராகத் தலைமைகள் மிகவும் தாழ்ந்த நிலையில் செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பழிவாங்கல் மற்றும் குரோதத்தை அடிப்படையாகக் கொண்டே  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென அவர் மேலும் சொன்னார்.

0 comments: