Follow me on Twitter RSS FEED

தமிழருக்காகக் குரல் கொடுத்தவர் ஒபாமா - மார்தட்டுகிறார் வைகோ

Posted in
தமிழருக்காகக் குரல் கொடுத்தவர் ஒபாமா - மார்தட்டுகிறார் வைகோஅமெரிக்க ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளமைக்கு இந்திய இடதுசாரிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமையை கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களாவன, 

இலங்கைத் தீவில் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு இந்தியா துரோகம் செய்தபோது அதனை இந்திய இடதுசாரிகள் கண்டித்தார்களா? இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் இன்னல்களை அனுபவித்தபோதும், அமெரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்த போதும் இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டுமென பராக் ஒபாமா வலியுறுத்தினார் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவத்துள்ளார். 

கருப்பு இனத்தில் இருந்து, வெள்ளை மாளிகை ஜனாதிபதியாக உள்ள பராக் ஒபாமாவை இந்திய நாட்டின் கோடானுகோடி மக்களும் கட்சி, மத எல்லைகளைக் கடந்து வாழ்த்தி வரவேற்க வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 comments: