Follow me on Twitter RSS FEED

பொன்சேகாவின் மனு தள்ளுபடி

Posted in
சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ள முதலாவது நீதிமன்றத் தீர்ப்பினை ரத்து செய்யுமாறிக் கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 15ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவினை சரத் பொன்சேகா தனது சட்டத்தரணியூடாக தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிபதிகளான ஹெட்டிகே மற்றும் டி.எஸ்.டி.லேக்கம்வசம் ஆகியோர் மு்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மனு பரிசீலனையில் தன்னால் பங்கேற்க முடியாதென நீதிபதி டி.எஸ்.டி.லேக்கம்வசம் கூறியுள்ளார்.
இதனையடுத்து வழக்கு எதிருவரும் 15ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் பிரிதொரு நீதிபதிகள் குழு முன்னிலையில் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 comments: