Follow me on Twitter RSS FEED

தாய்லாந்தில் 61 இலங்கையர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

Posted in
தாய்லாந்தில் 61 இலங்கையர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் தாய்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த, இலங்கைத் தமிழர்கள் 114 பேர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களுள் தகுந்த ஆவணங்கள் உள்ளவர்கள் விடுக்கப்பட்டு தற்போது 61 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இலங்கையில் யுத்தம் முடிவின் பின்னர், இலங்கையை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் பெற முற்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தாய்லாந்தின் தெற்கு மாகாணமான சோங்லா பகுதியில், கடந்த வியாழக்கிழமை பொலிஸ் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் இலங்கைத் தமிழர்கள் 114 பேர் பிடிபட்டனர். 

விஸா காலத்திற்குப் பிறகும் அதிக நாட்கள் தங்கியிருந்தது, சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் வந்தது போன்ற குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

0 comments: