Follow me on Twitter RSS FEED

கெஹெலிய-விமல் கூறுவதெல்லாம் அப்பட்டமான பொய் : சந்திரிக்கா

Posted in
அமைச்சர்களான கெஹெலியவும் விமல் வீரவன்சவும் அப்பட்டமான பொய்த் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

அவர் இதுபற்றிக் கூறுகையில், 

"முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவிடம் நான் மன்னிப்புக்கோரியதாலேயே சிறையிலிருந்த எனது கணவரான விஜயகுமாரதுங்க விடுதலை செய்யப்பட்டதாக அமைச்சர்களான விமல் வீரவன்ஸவும், கெஹலிய ரம்புக்வெலவும் கூறியிருப்பது அப்பட்டமான பொய். 

அவர்கள் இருவரும் தெரிவித்திருப்பது உண்மைக்குப் புறம்பானது,சட்டவிதிமுறைப்படியே எனது கணவர் விடுவிக்கப்பட்டார். அதுவன்றி நான் எவரிடமும் மன்னிப்புக் கோரி, எனது கணவர் விடுதலை செய்யப்படவில்லை" என்றார்.

0 comments: